முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.047.திருச்சிரபுரம்
1.047.திருச்சிரபுரம்
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
சிரபுரமென்பதும் சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
504 |
பல்லடைந்த வெண்டலையிற் வில்லடைந்த புருவநல்லாண் சொல்லடைந்த தொன்மறையோ செல்லடைந்த செல்வர்வாழுஞ் |
1.047.1 |
பொருள் பொதிந்த சொற்கள் நிரம்பிய பழமையான வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும், பிற கலைகளையும் கற்றுணர்ந்த செல்வர்கள் வாழும் சிரபுரம் என்னும் சீகாழிப் பதியுள் எழுந்தருளிய இறைவனே! பற்கள் பொருந்திய வெண்மையான தலையில் பல இடங்களுக்கும் போய்ப் பலியேற்பதோடு வில் போன்ற புருவத்தை உடைய உமையம்மையை உன் திருமேனியில் கொண்டுள்ள காரணம் யாதோ?
505 |
கொல்லைமுல்லை நகையினாளோர் அல்லல்வாழ்க்கைப் பலிகொண்டுண்ணு சொல்லநீண்ட பெருமையாளர் செல்லநீண்ட செல்வமல்கு |
1.047.2 |
சொல்லச் சொல்ல நீண்டு செல்லும் பெருமையாளரும், பழமையான கலைகளைக் கற்று வல்லவர்களுமாகிய அறிஞர்கள் வாழ்வதும், வழங்கத் தொலையாத செல்வ வளத்தை உடையதுமான சிரபுரம் மேவிய இறைவனே! முல்லை நிலத்தே தோன்றிய முல்லை யரும்பு போன்ற பற்களை உடைய உமையம்மை ஓர் கூற்றில் விளங்கவும் சென்று அல்லற்படுவோர் ஏற்கும் பலி உணவை ஏற்று உண்ணுதலில் விருப்பம் கொள்வது ஏனோ?
506 |
நீரடைந்த சடையின்மேலோர் ஊரடைந்த வேறதேறி யுண்பலி காரடைந்த சோலைசூழ்ந்து சீரடைந்த செல்வமோங்கு |
1.047.3 |
வண்டுகள் சீகாமரம் என்னும் பண்ணைப் பாடி மகிழ்ந்துறைவதும், மேகங்கள் தவழும் சோலைகளால் சூழப்பெற்றதும், அறநெறியில் விளைந்த செல்வம் பெருகி விளங்குவதுமாகிய சிரபுரம் மேவிய இறைவனே! கங்கையை அணிந்த சடைமுடியின் மேல் விளங்கும் பிறைமதி ஒன்றை அணிந்து, பல ஊர்களையும் அடைதற்கு ஏதுவாய ஆனேற்றில் ஏறிச் சென்று, பலரிடமும் பலி கொள்வது ஏனோ?
507 |
கையடைந்த மானினோடு மெய்யடைந்த வேட்கையோடு கையடைந்த களைகளாகச் செய்யடைந்த வயல்கள்சூழ்ந்த |
1.047.4 |
களையெடுப்போர் கைகளில், மிக அதிகமான களைகளாகச் செங்கழுநீர் மலர்கள் வந்தடையும் அழகிய வயல்களால் சூழப்பட்ட சிரபுரம் மேவிய இறைவனே! கைகளில் மான், கரிய பாம்பு ஆகியவற்றைக் கொண்டு உனது திருமேனியில் பெரு விருப்போடு உமையம்மையை இடப்பாகமாகக் கொண்டுள்ளது ஏனோ?
508 |
புரமெரித்த பெற்றியோடும் கரமெடுத்துத் தோலுரித்த மரமுரித்த தோலுடுத்த சிரமெடுத்த கைகள் கூப்புஞ் |
1.047.5 |
மரத்தை உரித்ததால் ஆன மரவுரி என்னும் ஆடையை அணிந்த முனிவர்களும் தேவர்களும் கைகளைத் தலைமிசைக் கூப்பி வணங்கும் சிரபுரம் மேவிய இறைவனே! திரிபுரங்களை எரித்தழித்த பெரு வீரத்தோடு போர் செய்ய வந்த மத யானையைக் கையால் தூக்கி அதன் தோலை உரித்துப் போர்த்த, காரணம் யாதோ?
509 |
கண்ணுமூன்று முடையதன்றிக் பண்ணுமூன்று வீணையோடு எண்ணுமூன்று கனலுமோம்பி திண்ணமூன்று வேள்வியாளர் |
1.047.6 |
ஆகவனீயம், காருகபத்தியம், தக்ஷணாக்கினி என்று எண்ணப்படும் முத்தீயையும் வேட்பதுடன் எழு பிறப்பிலும் தூயவராய் உறுதிப்பாட்டுடன் தேவ யாகம், பிதிர் யாகம், இருடி யாகம் ஆகிய மூன்று வேள்விகளையும் புரியும் அந்தணாளர் வாழும் சிரபுரம் மேவிய இறைவனே; முக்கண்களை உடையவனாய்க் கைகளில் வெண் மழு, பண் மூன்றுடைய வீணை, பாம்பு ஆகியன கொண்டுள்ள காரணம் யாதோ?
510 |
குறைபடாத வேட்கையோடு பொறைபடாத வின்பமோடு இறைபடாத மென்முலையார் சிறைபடாத பாடலோங்கு |
1.047.7 |
சிறிதும் சாயாத மெல்லிய தனங்களை உடைய இளமகளிர் மாளிகைகளின் மேல் இருந்து குற்றமற்ற பாடல்களைப் பாடும் மகிழ்ச்சி மிகுந்துள்ள சிரபுரம் மேவிய இறைவனே, குன்றாத வேட்கையோடு திரண்ட கை வளைகளை உடைய உமையம்மையை ஒரு பாகமாக அளவற்ற இன்பத்துடன் புணர்தற்குக் காரணம் என்னையோ.
511 |
மலையெடுத்த வாளரக்க நிலையெடுத்த கொள்கையானே துலையெடுத்த சொற்பயில்வார் சிலையெடுத்த தோளினானே |
1.047.8 |
கயிலை மலையை எடுத்த வாள்வலி உடைய இராவணன் அஞ்சுமாறு கால் விரல் ஒன்றினால் அடர்த்துத் தன் நிலையை எடுத்துக் காட்டிய செயலைப் புரிந்தவனே, குற்றமற்றவனே, தன்னை நினைவாரும் இருவினையொப்புடன் தோத்திரிக்கும் அன்பர்களும் மேன்மை மிக்க வீதி தொறும் வாழ விசயனுக்காக வில்லைச் சுமந்த தோளினை உடையவனே! சிரபுரம் மேவியவனே! கொள்கையனே என்று பாடம் இருக்கலாம். நிலை எடுத்த கொள்கை என்னே என்று பொருள் கொள்ளின் ஏனைய திருப்பாடல்களுடன் ஒக்கும்.
512 |
மாலினோடு மலரினானும் சாலுமஞ்சப் பண்ணிநீண்ட நாலுவேத மோதலார்கள் சேலுமேயுங் கழனிசூழ்ந்த |
1.047.9 |
நான்கு வேதங்களையும் ஓதும் அந்தணர்கள் நம் துணைவனே என்று போற்றி இறைஞ்சச் சேல் மீன்கள் மேயும் வயல்கள் சூழ்ந்த சிரபுரம் மேவிய இறைவனே! தாமே பெரியர் என வந்த திருமாலும் தாமரை மலரில் உறையும் நான்முகனும் இயலாது மிகவும் அஞ்சுமாறு செய்து மிக நீண்ட திருவுருவைக் கொண்டது ஏன்?
513 |
புத்தரோடு சமணர்சொற்கள் பத்தர்வந்து பணியவைத்த மத்தயானை யுரியும்போர்த்து சித்தர்வந்து பணியுஞ்செல்வச் |
1.047.10 |
மதம் பொருந்திய யானையின் தோலைப் போர்த்து உமையம்மையாருடன் சித்தர்கள் பலரும் பணியச் செல்வச் சிரபுரநகரில் மேவிய இறைவனே! புத்தர்கள் சமணர்கள் ஆகியபுறச்சமயிகளின் வார்த்தைகள் புறனுரை என்று கருதும் பத்தர் வந்து பணியுமாறு செய்த பான்மையாதோ? உரியும் - உம்மை இசைநிறை.
514 |
தெங்குநீண்ட சோலைசூழ்ந்த அங்கநீண்ட மறைகள்வல்ல பங்கநீங்கப் பாடவல்ல சங்கமோடு நீடிவாழ்வர் |
1.047.11 |
தென்னைகள் நீண்டு வளர்ந்து பயன்தரும் சோலைகள் சூழ்ந்த சிரபுரம் மேவிய இறைவனை ஆறு அங்கங்களுடன் விரிந்துள்ள வேதங்களை அறிந்துணர்ந்த அழகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இப்பதிக வாசகங்களைத் தம் குற்றங்கள் நீங்கப் பாடவல்ல பக்தர்கள் இவ்வுலகில் அடியவர் கூட்டங்களோடு வாழும் தன்மையினால் வாழ்நாள் பெருகி வாழ்வர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.047.திருச்சிரபுரம் , சிரபுர, சிரபுரம், மேயவனே, மேவிய, இறைவனே, உடைய, காரணம், உமையம்மையை, என்னும், கைகளில், வேட்கையோடு, திருமுறை, யாகம், யாதோ, திருச்சிரபுரம், வாழும், வைத்தலென்னே, பதிகங்கள், அழகிய, களைகளாகச், புறனுரை, பாடவல்ல, பாம்பு, பெரு, எடுத்த, அஞ்சுமாறு, தேவாரப், கையடைந்த, வந்த, சூழ்ந்த, அணிந்த, திருமேனியில், கொண்டுள்ள, பழமையான, வேதங்களையும், பொருந்திய, பொருள், நீண்டு, கொள்வது, பெருகி, சென்று, முல்லை, திருச்சிற்றம்பலம், மேல்