முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.043.திருக்கற்குடி
1.043.திருக்கற்குடி
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முத்தீசர்.
தேவியார் - அஞ்சனாட்சியம்மை.
459 |
வடந்திகழ் மென்முலை யாளைப் தடந்திரை சேர்புனன் மாதைத் இடந்திகழ் முப்புரி நூலர் கடந்தவர் காதலில் வாழுங் |
1.043.1 |
திருக்கற்குடி மாமலையை விரும்பி அதன்கண் வாழும் இறைவர், முத்துவடம் விளங்கும் மெல்லிய தனங்களை உடைய உமையம்மையை மதித்து இடப்பாகமாகக் கொண்டு பெரிய அலைகள் வீசும் கங்கை நங்கையைத் தாழ்கின்ற சடைமிசை வைத்துள்ள சதுரப்பாடுடையவர்: திருமேனியின் இடப்பாகத்தே விளங்கும் முப்புரிநூலை அணிந்தவர். இன்ப துன்பங்களைக் கடந்தவர்.
460 |
அங்கமொ ராறுடை வேள்வி பங்கமில் பாடலோ டாடல் சங்கம தார்குற மாதர் கங்குலின் மாமதி பற்றுங் |
1.043.2 |
சங்கு வளையல்கள் அணிந்த குறப் பெண்களின் கைகளில் விளங்கும் பிள்ளைகள் இரவு நேரத்தில் தாவிப்பெரிய மதியைக் கைகளால் பற்றும் திருக்கற்குடி மாமலை இறைவர் வேள்விகட்குரிய விதிகளை விளக்கி ஆறு அங்கங்களுடன் கூடிய, அரிய வேதங்கள் நான்காகிய குற்றமற்ற பாடல், ஆடல், தாளச் சதிகள் ஆகியவற்றைப் பழகியவர்.
461 |
நீரக லந்தரு சென்னி தாரகை யின்னொளி சூழ்ந்த போரக லந்தரு வேடர் காரகி லின்புகை விம்முங் |
1.043.3 |
போர் செய்தற்கு ஏற்ற அகலமான மார்பினைக் கொண்டுள்ள வேடர்கள் காடுகளிலிருந்து வெட்டிக் கொணர்ந்து எரிக்கும் விறகுகளில் கரிய அகிலின் புகை மணம் வீசும் திருக்கற்குடி மாமலை இறைவர் பரந்து விரிந்து வந்த கங்கை நீரை உடைய முடி மீது நீண்டு மலர்ந்த ஊமத்தை மலரை அணிந்து விண்மீன்களின் ஒளி சூழ்ந்து விளங்கும் குளிர்ந்த பிறை மதியைச் சூடிய சைவராவர். அம்மலையில் மரமானவை அகிலன்றிப் பிறிதில்லை என்பதாம்.
462 |
ஒருங்களி நீயிறை வாவென் டிருங்கள மார விடத்தை மருங்களி யார்பிடி வாயில் கருங்களி யானை கொடுக்குங் |
1.043.4 |
மதம் கொண்ட கரிய களிறு அருகில் அன்பு காட்டி வரும் பெண் யானையின் வாயில், பசுமையோடு முளைத்து வரும் மூங்கில் முளைகளை வாரிக்கொடுத்து ஊட்டும் திருக்கற்குடி மாமலை இறைவர், தேவர்கள் பெருமானே, அனைவரையும் ஒருங்கு காத்தளிப்பாயாக என ஓலமிடுவதைக் கேட்டுப் பாற்கடலிடை எழுந்த நஞ்சைத் தமது மிடறு கருமைக்கு இடமாகுமாறு இனிய அமுதமாகக் கருதி உண்டு காத்த ஈசராவார்.
463 |
போர்மலி திண்சிலை கொண்டு பார்மலி வேடுரு வாகிப் ஏர்மலி கேழல் கிளைத்த கார்மலி வேடர் குவிக்குங் |
1.043.5 |
அழகிய பன்றிகள் நிலத்தைக் கிளைத்தலால் வெளிப்பட்ட இனிய ஒளியோடு கூடிய சிறந்த மணிகளைக் கரிய நிறமுடைய வேடர்கள் பல இடங்களிலும் குவித்துள்ள திருக்கற்குடி மாமலை இறைவர், போர் செய்யத்தக்க வலிய வில்லைக் கையில் கொண்டு, பூத கணங்கள் புடை சூழ்ந்து வர மண்ணுலகில் தாமொரு வேடர் உருத் தாங்கி, முற்காலத்தில் அருச்சுனருக்கு அருள் செய்தவராவார்.
464 |
உலந்தவ ரென்ப தணிந்தே விலங்கல்வில் வெங்கன லாலே நலந்தரு சிந்தைய ராகி கலந்தவர் காதலில் வாழுங் |
1.043.6 |
நன்மை அமைந்த மனமுடையவராய் நாவினால் புகழும் சொல் மாலைகளாகிய தோத்திரங்களினாலே இறைவன் திருவருளில் கலந்த மெய்யடியார்கள் அன்போடு வாழும் திருக்கற்குடி மாமலை இறைவர், இறந்தவர்களின் எலும்பை அணிந்து, ஊர் மக்கள் இடும் பிச்சையை ஏற்கும் பிட்சாடனராய் மேருமலையாகிய வில்லிடைத் தோன்றிய கொடிய கனலால் முப்புரங்களும் வெந்தழியுமாறு முனிந்தவர்.
465 |
மானிட மார்தரு கையர் ஊனிடை யார்தலை யோட்டி தேனிடை யார்தரு சந்தின் கானிடை வேடர் விளைக்குங் |
1.043.7 |
தேனடைகள் பொருந்திய சந்தன மரங்களுக்கிடையே வலிய கரைகளைக் கட்டி, தினைகளை விதைத்துக் கானகத்தில் வேடர்கள் தினைப்பயிர் விளைக்கும் திருக்கற்குடி மாமலை இறைவர் மானை இடக் கையிலும், மழுவை வலக் கையிலும் தரித்தவர். ஊன் பொருந்திய தலையோட்டை உண்கலனாக உகந்தவர்.
466 |
வாளமர் வீர நினைந்த தோளமர் வன்றலை குன்றத் தாளமர் வேய்தலை பற்றித் காளம தார்முகில் கீறுங் |
1.043.8 |
அடிமரத்தோடு கூடிய மூங்கிலினது தழையைப் பற்றி வளைத்து உண்ட களிறு, அதனை வேகமாக விடுதலால் அம்மூங்கில், விசையோடு சென்று, கரிய நிறம் பொருந்திய மேகங்களைக் கீறும், திருக்கற்குடி மாமலை இறைவர், வாட்போரில் வல்ல தனது பெருவீரத்தை நினைந்த இராவணனைப் பெருமை பொருந்திய கயிலை மலையின்கீழ் அவன் தோள்களும், வலிய தலைகளும் நெரியுமாறு தமது பழம்புகழ் வாய்ந்த கால் விரலால் ஊன்றிய துணைவராவார்.
467 |
தண்டமர் தாமரை யானுந் கொண்டவ னும்மறி வொண்ணாக் வண்டிசை யாயின பாட கண்டமர் மாமயி லாடுங் |
1.043.9 |
வண்டுகள் இசை பாட, நீண்ட பொழிலின் நீழலைக் கண்டு மகிழும் சிறந்த மயில்கள் ஆடும் திருக்கற்குடி மாமலை இறைவர் குளிர்ந்த தாமரை மலர்மேல் உறையும் நான்முகனாலும் உயர்ந்த இவ்வுலகை அளந்த திருமாலாலும் அறிய ஒண்ணாத இயல்பினர். வெண்ணிறமான விடையை ஊர்ந்து வருபவர்.
468 |
மூத்துவ ராடையி னாரும் நாத்துவர் பொய்ம்மொழி யார்கள் ஏத்துயர் பத்தர்கள் சித்தர் காத்தவர் காமரு சோலைக் |
1.043.10 |
காவியாடையணிந்த புத்தர்களும், கடுக்காய்ப் பொடியை நிரம்ப உண்ணும் சமணர்களும், நாவிற்கு வெறுப்பை உண்டாக்கும் பொய்ம்மொழி பேசுபவராய் நேயமற்ற அறிவுடையவராய் இருப்போராவர். அவர்களை விடுத்துத் தம்மை ஏத்தி வாழ்த்தி உயரும் பக்தர்களும், சித்தர்களும் வணங்க அவர்கட்கு வரும் இடர்களை அகற்றிக் காத்தவர், அழகிய சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடி மாமலை இறைவர்.
469 |
காமரு வார்பொழில் சூழுங் நாமரு வண்புகழ்க் காழி பாமரு செந்தமிழ் மாலை பூமலி வானவ ரோடும் |
1.043.11 |
அழகிய நீண்ட பொழில்களால் சூழப்பட்ட திருக்கற்குடி மாமலை இறைவரை, நாவிற் பொருந்திய வண்புகழால் போற்றப்பெறும் சீகாழிப் பதியில் தோன்றிய நன்மையமைந்த ஞானசம்பந்தன் பாடிய செந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர்கள். பொலிவுடன் கூடிய தேவர்களோடும் பொன்னுலகின்கண் பொலிவோராவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.043.திருக்கற்குடி , மாமலை, திருக்கற்குடி, கற்குடி, யாரே, இறைவர், பொருந்திய, கூடிய, விளங்கும், வேடர், கரிய, அழகிய, வரும், வலிய, வேடர்கள், திருமுறை, கொண்டு, காத்தவர், பொய்ம்மொழி, காமரு, இனிய, செந்தமிழ், தமது, நீண்ட, வார்பொழில், நினைந்த, களிறு, தோன்றிய, ராகி, சிறந்த, தாமரை, கையிலும், போர், வாழுங், வாழும், உடைய, காதலில், கடந்தவர், தேவாரப், பதிகங்கள், திருச்சிற்றம்பலம், வீசும், கங்கை, அணிந்து, சூழ்ந்து, குளிர்ந்த, சூடிய, சூழ்ந்த, லந்தரு, நீடிய, வாயில்