முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.040.திருவாழ்கொளிபுத்தூர்
1.040.திருவாழ்கொளிபுத்தூர்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாணிக்கவண்ணவீசுரர்.
தேவியார் - வண்டார்பூங்குழலம்மை.
426 |
பொடியுடைமார்பினர் போர்விடையேறிப் கொடியுடையூர்திரிந் தையங் வடிவுடைவாணெடுங் கண்ணுமைபாக கடிகமழ் மாமலரிட்டுக் |
1.040.1 |
திருநீறு அணிந்த மார்பினராய், வீரம் மிக்க விடை மீது ஏறி, பூத கணங்கள் புடை சூழ்ந்து வர, கொடிகள் கட்டிய ஊர்களில் திரிந்து பற்பல வாசகங்களைக் கூறிப் பலியேற்று, அழகிய வாள் போன்ற நெடிய கண்களையுடைய உமையொரு பாகராகிய சிவபிரானார் எழுந்தருளிய வாழ்கொளிபுத்தூர் சென்று மணம் கமழும் சிறந்த மலர்களால் அருச்சித்து அக்கறைமிடற்றார் திருவடிகளைக் காண்போம்.
427 |
அரைகெழுகோவண வாடையின்மேலோர் புரைகெழுவெண்டலை யேந்திப் வரைகெழுமங்கைய தாகமொர்பாக விரைகமழ் மாமலர்தூவி |
1.040.2 |
இடையில் கட்டிய கோவண ஆடையின்மேல் ஆடும் அரவம் ஒன்றைக் கட்டிக் கொண்டு, துளை பொருந்திய வெண்தலையோட்டைக் கையில், ஏந்திப் பலியேற்று, சினம் பொருந்திய விடை மீது ஏறிப் பலரும் புகழ, இமவான் மகளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனாகிய சிவபிரான் எழுந்தருளிய திருவாழ்கொளிபுத்தூர் சென்று, மணம் கமழும் சிறந்த மலர்களைத் தூவி அவ்விரிசடையான் திருவடிகளைச் சேர்வோம்.
428 |
பூணெடுநாக மசைத்தனலாடிப் ஊணிடுபிச்சையூ ரையம் வாணெடுங்கண்ணுமை மங்கையொர்பாக தாணெடு மாமலரிட்டுத் |
1.040.3 |
நெடிய பாம்பை அணிகலனாகப் பூண்டு. அனலைக் கையின்கண் ஏந்தி, ஆடிக்கொண்டும், பிரமனது தலையோட்டை அழகிய கையொன்றில் ஏந்திப் பல ஊர்களிலும் திரிந்து மக்கள் உணவாகத் தரும் பிச்சையைத் தனக்கு உணவாக ஏற்றுப் பற்பலவாறு கூறிக்கொண்டும், வாள் போன்ற நீண்ட கண்களையுடைய உமையம்மையை ஒரு பாகமாக ஏற்று விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய திருவாழ்கொளிபுத்தூர் சென்று அப்பெருமான் திருவடிகளில் சிறந்த மலர்களைத் தூவித் தலைவனாக விளங்கும் அவன் தாள் நிழலைச் சார்வோம்.
429 |
தாரிடுகொன்றையொர் வெண்மதிகங்கை ஊரிடுபிச்சைகொள் செல்வ வாரிடுமென்முலை மாதொருபாக காரிடு மாமலர்தூவிக் |
1.040.4 |
கொன்றை மாலையையும், வெண்மதியையும், கங்கையையும், தாழ்ந்து தொங்கும் சடைமுடியில் சூடி, ஊர் மக்கள் இடும் பிச்சையை ஏற்றுக்கொண்டு, அதுவே தனக்குச் செல்வம், உணவு என்று பலவாறு கூறிக்கொண்டு கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட சிவபிரான் எழுந்தருளிய திருவாழ்கொளிபுத்தூர் சென்று, கார்காலத்தே மலரும் சிறந்த கொன்றை மலர்களைத் தூவிக் கறைமிடற்றானாகிய அப்பெருமான் திருவடிகளைக் காண்போம்.
430 |
கனமலர்க்கொன்றை யலங்கலிலங்கக் புனமலர்மாலை புனைந்தூர் வனமுலைமாமலை மங்கையொர்பாக இனமல ரேய்ந்தனதூவி |
1.040.5 |
கார்காலத்து மலராகிய கொன்றை மலர்மாலை தன் திருமேனியில் விளங்க, ஒரு காதில் வெண்குழையணிந்து, முல்லை நிலத்து மலர்களால் தொடுக்கப்பெற்ற மாலைகளைச் சூடிப் பல ஊர்களுக்கும் சென்று பற்பல கூறிப் பலியேற்று அழகிய தனங்களையுடைய மலைமகளாகிய பார்வதியை ஒருபாகமாகக் கொண்ட எம்பிரான் எழுந்தருளிய திருவாழ்கொளிபுத்தூர் சென்று நமக்குக்கிட்டிய இனமான மலர்களைத் தூவி அவன் அடிகளைச் சேர்வோம்.
431 |
அளைவளர்நாக மசைத்தனலாடி களைதலை யிற்பலிகொள்ளுங் வளையொலிமுன்கை மடந்தையொர்பாக தளையவிழ் மாமலர்தூவித் |
1.040.6 |
புற்றின்கண் வாழும்பாம்பினை இடையில் கட்டி, சுடுகாட்டில் ஆடி, தாமரை மலர் மேல் உறையும் பிரமனின் உச்சித் தலையைக் கொய்து, அத்தலையோட்டில் பலிகொள்ளும் தலைவனே, நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கள்வனே என்று, வளையல் ஒலிக்கும் முன் கையையுடைய பார்வதி தேவியை ஒருபாகமாகக் கொண்ட சிவபெருமான் உறையும் திருவாழ்கொளிபுத்தூர் சென்று, மொட்டவிழ்ந்த நறுமலர்களைத்தூவி அப்பெருமானின் தாளிணைகளைச் சார்வோம்.
432 |
அடர்செவிவேழத்தி னீருரிபோர்த்து உடலிடுபிச்சையோ டைய மடனெடுமாமலர்க் கண்ணியொர்பாக தடமல ராயினதூவித் |
1.040.7 |
பரந்த காதுகளையுடைய யானையைக் கொன்று, அதன் உதிரப் பசுமை கெடாத தோலை உரித்துப் போர்த்து, கிள்ளிய பிரமன் தலையோட்டைக் கையில் ஏந்தி, தாருகாவன முனிவர் மகளிர் தம் கைகளால் இட்ட பிச்சையோடு ஐயம், உண்டி, என்று பலகூறப்பலியேற்ற மடப்பம் வாய்ந்த நீண்ட நீல மலர் போன்ற கண்களையுடைய உமையொரு பாகனாக உள்ள திருவாழ்கொளிபுத்தூர் இறைவனை விரிந்த மலர்கள் பலவற்றால் அருச்சித்து அப்பெருமான் தாள்நிழலைச் சார்வோம்.
433 |
உயர்வரையொல்க வெடுத்தவரக்க அயலிடுபிச்சையோ டைய வயல்விரிநீல நெடுங்கணிபாக சயவிரி மாமலர்தூவித் |
1.040.8 |
உயர்ந்த கயிலைமலையை அசையுமாறு பெயர்த்த இராவணனது ஒளி பொருந்திய கடகத்தோடு கூடிய தோள் வலிமையை அடர்த்தவனே என்றும், ஊர் மக்கள் இடும் பிச்சை, ஐயம் ஆகியவற்றை உண்ணும் தலைவனே என்றும், வயலின்கண் தோன்றி மலர்ந்த நீலமலர் போன்ற நீண்ட கண்களையுடைய உமையம்மை பாகனே என்றும் திருவாழ்கொளிபுத்தூர் இறைவனே, என்றும் வெற்றியோடு மலர்ந்த சிறந்த மலர்களைத் தூவி அத்தாழ் சடையான் அடிகளைச் சார்வோம்.
434 |
கரியவனான்முகன் கைதொழுதேத்தக் எரியுருவாகியூ ரைய வரியரவல்குன் மடந்தையொர்பாக விரிமல ராயினதூவி |
1.040.9 |
திருமாலும் நான்முகனும் கைகளால் தொழுதேத்திக் காணவும் சாரவும் இயலாத எரி உரு ஆகியவனே என்றும், பல ஊர்களிலும் திரிந்து ஐயம், பிச்சை ஆகியவற்றை உண்பவனே என்றும் போற்றிப் பொறிகளோடு கூடிய பாம்பின் படம் போன்ற அல்குலை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவனாகிய வாழ்கொளிபுத்தூர் இறைவனை விரிந்த மலர்களைத் தூவி வழிபட்டு விகிர்தனாகிய அவன் சேவடிகளைச் சேர்வோம்.
435 |
குண்டமணர்துவர்க் கூறைகண்மெய்யிற் வெண்டலையிற்பலி கொண்டல் வண்டமர்பூங்குழன் மங்கையொர்பாக தொண்டர்கண் மாமலர்தூவத் |
1.040.10 |
கொழுத்த அமணர்களும், துவராடைகள் போர்த்த புத்தர்களும், புறம் பேசுமாறு வெண்மையான தலையோட்டின்கண் பலியேற்றலை விரும்பியவனே என்று புகழ்ந்து போற்றி, வண்டுகள் மொய்க்கும் அழகிய கூந்தலையுடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவன் எழுந்தருளிய வாழ்கொளிபுத்தூர் சென்று அடியவர்கள் சிறந்த மலர்களைத் தூவி வழிபட அவர்கட்குக் காட்சி அளிப்பவனாகிய சிவனடிகளைச் சேர்வோம்.
436 |
கல்லுயர்மாக்கட னின்றுமுழங்குங் நல்லுயர் நான்மறை நாவின் வல்லுயர்சூலமும் வெண்மழுவாளும் சொல்லியபாடல்கள் வல்லார் |
1.040.11 |
மலைபோல உயர்ந்து வரும் அலைகளை உடைய பெரிய கடல், பெரிய கரையோடு மோதி முழங்கும் காழிப்பழம்பதியில் தோன்றிய, உயர்ந்த நான்மறைகள் ஓதும் நாவினை உடைய நற்றமிழ் ஞானசம்பந்தன், வலிதாக உயர்ந்த சூலம், வெண்மையான மழு, வாள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில் வல்லவனாகிய சிவபிரான் விளங்கும் வாழ்கொளிபுத்தூரைப் போற்றிச் சொல்லிய. பாடல்களை ஓத வல்லவர் துயர் கெடுதல் எளிதாம்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.040.திருவாழ்கொளிபுத்தூர் , திருவாழ்கொளிபுத்தூர், மாயவன்வாழ்கொளி, சேர்வோம், சார்வோம், சென்று, மலர்களைத், என்றும், சிறந்த, எழுந்தருளிய, உமையம்மையை, தூவி, காண்போம், புத்தூர்த், பலகூறி, சிவபிரான், உடைய, அழகிய, கண்களையுடைய, திருமுறை, முண்டியென்று, அவன், ஐயம், கொன்றை, அப்பெருமான், விளங்கும், புத்தூர், மக்கள், கொண்ட, பாகமாக, மங்கையொர்பாக, நீண்ட, பொருந்திய, உயர்ந்த, வாழ்கொளிபுத்தூர், பலியேற்று, வாள், திரிந்து, அடிகளைச், மடந்தையொர்பாக, பெரிய, ஒருபாகமாகக், வெண்மையான, ஞானசம்பந்தன், ஆகியவற்றை, நற்றமிழ், மலர்ந்த, பிச்சை, கைகளால், புத்தூர்ச், போற்றி, இறைவனை, தலைவனே, உறையும், தேவாரப், மாமலர்தூவித், கூடிய, மலர், விரிந்த, தலைவனதாணிழல், கமழும், மணம், கறைமிடற்றானடி, மலர்களால், அருச்சித்து, விடை, உமையொரு, கட்டிய, பற்பல, கூறிப், நெடிய, திருவடிகளைக், புத்தூர்க், மீது, லேந்தி, பதிகங்கள், ஏந்தி, ஊர்களிலும், திருச்சிற்றம்பலம், பாகமாகக், இடையில், கையில், ஏந்திப், கொண்டு, இடும்