முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.004.திருப்புகலியும் - திருவீழிமிழலையும்
1.004.திருப்புகலியும் - திருவீழிமிழலையும்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
இவ்விரண்டும் சோழநாட்டிலுள்ளவை, புகலி என்பது சீகாழிக்கொருபெயர்.
புகலியில் சுவாமிபெயர்
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
வீழிமிழலையில் சுவாமிபெயர்
சுவாமிபெயர் - வீழியழகர்.
தேவியார் - சுந்தரகுசாம்பிகை.
34 |
மைம்மரு பூங்குழற் கற்றைதுற்ற பொய்ம்மொழி யாமறை யோர்களேத்தப் எம்மிறை யேயிமை யாதமுக்க மெய்ம்மொழி நான்மறை யோர்மிழலை |
1.004.1 |
கற்றையாகச் செறிந்து கருமை மருவி வளர்ந்த அழகிய கூந்தலையும், ஒளி சேர்ந்த நுதலையும், மான் விழி போன்ற விழியையும் உடைய உமையம்மையோடு, பொய் பேசாத அந்தணர்கள் ஏத்தப் புகலியில் விளங்கும் புண்ணியம் திரண்டனைய வடிவினனே, எம் தலைவனே! இமையாத முக்கண்களை உடைய எம் ஈசனே!, என்பால் அன்பு உடையவனே, வாய்மையே பேசும் நான்மறையை ஓதிய அந்தணர் வாழும் திருவீழிமிழலையில் திருமாலால் விண்ணிலிருந்து கொண்டுவந்து நிறுவப்பட்ட கோயிலில் விரும்பியுறைதற்குரிய காரணம் என்னையோ? சொல்வாயாக!
35 |
கழன்மல்கு பந்தொடம் மானைமுற்றில் பொழின்மல்கு கிள்ளையைச் சொற்பயிற்றும் எழின்மல ரோன்சிர மேந்தியுண்டோ மிழலையுள் வேதிய ரேத்திவாழ்த்த |
1.004.2 |
மகளிர்க்குப் பொருந்திய கழங்கு, பந்து, அம்மானை, முற்றில் ஆகிய விளையாட்டுக்களைக் கற்ற சிற்றிடைக் கன்னிமார்கள், சோலைகளில் தங்கியுள்ள கிளிகட்குச் சொற்களைக் கற்றுக் கொடுத்துப் பேசச் செய்யும் திருப்புகலியில் விளங்கும் புண்ணியனே! அழகிய தாமரை மலரில் விளங்கும் பிரமனது தலையோட்டில் பலியேற்றுண்டு இன்புறும் செல்வனே! திருவீழிமிழலையில் வேதியர்கள் போற்றித் துதிக்க விண்ணிழி கோயிலை நீ விரும்பியதற்குக் காரணம் என்ன? சொல்வாயாக!
36 |
கன்னிய ராடல் கலந்துமிக்க பொன்னியன் மாட நெருங்குசெல்வப் இன்னிசை யாழ்மொழி யாளோர்பாகத் மின்னிய னுண்ணிடை யார்மிழலை |
1.004.3 |
கன்னிப் பெண்கள் விளையாட்டை விரும்பிப் பந்தாடுதற்குரிய தெருக்களில் கூடியாட உயர்ந்த பொன்னிறமான அழகுடன் விளங்கும் மாடங்கள் நெருங்கும் செல்வப் புகலி நிலாவிய புண்ணியனே! யாழினது இனிய இசைபோலும் மொழி பேசும் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட எம் தலைவனே! மின்னல் போன்ற நுண்ணிய இடையினை உடைய அழகிய மகளிர் மருவும் திருவீழிமிழலையில் விண்ணிழி விமானத்தை நீ விரும்பியதற்குக் காரணம் என்னையோ? சொல்வாயாக!
37 |
நாகப ணந்திக ழல்குன்மல்கு பூகவ னம்பொழில் சூழ்ந்தவந்தண் ஏகபெ ருந்தகை யாயபெம்மா மேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை |
1.004.4 |
பாம்பின் படம் போன்று திகழும் அல்குலையும், அழகு மல்கும் நுதலையும், மான் விழி போன்ற விழியையும் உடைய பார்வதி அம்மையுடன் வளமான கமுகஞ்சோலைகள் சூழ்ந்து விளங்கும் அழகும் தண்மையும் உடைய சீகாழிப் பதியில் விளங்கும்புண்ணியனே! தன்னொப்பார் இன்றித் தானே முதலாய பெருமானே! எம் தலைவனே! மேகங்கள் தோயும் மதில்கள் சூழ்ந்த திருவீழிமிழலையில் விண்ணிழி விமானக் கோயிலை விரும்பியது ஏன்! சொல்வாயாக.
38 |
சந்தள றேறுத டங்கொள்கொங்கைத் புந்தியி னான்மறை யோர்களேத்தும் எந்தமை யாளுடை யீசவெம்மா வெந்தவெண் ணீறணிவார்மிழலை |
1.004.5 |
சந்தனக் குழம்பு பூசிய பெரிதான தனங்களை உடைய உமையம்மையோடு, உண்மையில் தவறாத புத்தியினை உடைய நான்மறை அந்தணர்கள் போற்றும் புகலியில் விளங்கும் புண்ணியனே! எம்மை அநாதியாகவே ஆளாய்க் கொண்டுள்ள ஈசனே! எம் தலைவனே! எமக்குக் கடவுளே! வெந்த திருவெண்ணீற்றை அணிந்த அடியவர் வாழும் திருவீழிமிழலையுள் விண்ணிழி கோயிலை நீ விரும்புதற்குக் காரணம் என்னையோ? சொல்வாயாக!
39 |
சங்கொளி யிப்பி சுறாமகரந் பொங்கொலி நீர்சுமந் தோங்குசெம்மைப் எங்கள்பி ரானிமை யோர்கள்பெம்மா வெங்கதிர் தோய்பொழில் சூழ்மிழலை |
1.004.6 |
ஒளி உடைய சங்கு, முத்துச் சிப்பிகள், சுறா, மகரம் ஆகிய மீன்கள், ஆகிய இவற்றைத் தாங்கி வரிசை வரிசையாய் வரும் கடல் அலைகளால் மேலும் மேலும் பொங்கும் ஒலியோடு கூடிய ஓதநீர் ஓங்கும் செம்மையான புகலியில் விளங்கும் புண்ணியனே! எங்கள் தலைவனே! இமையோர் பெருமானே! எம் கடவுளே! கதிரவன் தோயும் பொழில்களாற் சூழப்பெற்ற விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக!
40 |
காமனெ ரிப்பிழம் பாகநோக்கிக் பூமரு நான்முகன் போல்வரேத்தப் ஈமவ னத்தெரி யாட்டுகந்த வீமரு தண்பொழில் சூழ்மிழலை |
1.004.7 |
மன்மதன் தீப்பிழம்பாய் எரியுமாறுகண்ணால் நோக்கி, மூங்கில் போலும் தோளினையுடைய உமையம்மையோடும் கூடி, தாமரை மலரில் விளங்கும் நான்முகன் போல்வார் போற்றப் புகலியில் விளங்கும் புண்ணியனே! சுடுகாட்டில் எரியாடலை விரும்பும் எம்பெருமானே! மலர்கள் மருவிய குளிர்ந்த பொழில்களால் சூழப் பெற்ற திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக!
41 |
இலங்கையர் வேந்தெழில் வாய்த்ததிண்டோள் புலங்களைக் கட்டவர் போற்றவந்தண் இலங்கெரி யேந்திநின் றெல்லியாடு விலங்கலொண் மாளிகை சூழ்மிழலை |
1.004.8 |
இலங்கையர் தலைவனாகிய இராவணன் அழகிய வலிய தோள்கள் ஒடிந்து, அலறுமாறு தன் கால் விரலால் சிறிது ஊன்றி, ஐம்புல இன்பங்களைக் கடந்தவர்களாகிய துறவியர் போற்ற, அழகிய தண்மையான புகலியில் விளங்கும் புண்ணியனே! விளங்கும் தீப்பிழம்பைக் கையில் ஏந்தி இரவில் இடுகாட்டில் ஆடும் எம் தலைவனே! மலை போன்ற ஒளி பொருந்திய மாளிகைகளால் சூழப் பெற்ற திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக.
42 |
செறிமுள ரித்தவி சேறியாறுஞ் பொறியர வத்தணை யானுங்காணாப் எறிமழு வோடிள மான்கையின்றி வெறிகமழ் பூம்பொழில் சூழ்மிழலை |
1.004.9 |
மணம் செறிந்த தாமரைத் தவிசில் அறுவகைக் குற்றங்களையும் விலக்கி ஏறி அதில் வீற்றிருக்கும் நான்முகனும், புள்ளிகளையுடைய பாம்பினைப் படுக்கையாகக் கொண்ட திருமாலும் காண இயலாதவனாய்ப் புகலியில் விளங்கும் புண்ணியனே! பகைவரைக் கொல்லும் மழுவாயுதத்தோடு இளமான் ஆகியன கையின்கண் இன்றி விளங்கும் பெருமானே! மணம் கமழும் அழகிய பொழில்களால் சூழப்பெற்ற திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக.
43 |
பத்தர்க ணம்பணிந் தேத்தவாய்த்த புத்தரு நின்றலர் தூற்றவந்தண் எத்தவத் தோர்க்குமி லக்காய்நின்ற வித்தகர் வாழ்பொழில் சூழ்மிழலை |
1.004.10 |
தன்னிடம் பத்திமையுடையோர் பணிந்து போற்றும் பான்மையோடுகூடச் சமணரும், புத்தரும் அலர் தூற்ற, அழகிய குளிர்ந்த புகலியின்கண் விளங்கும் புண்ணியனே! எவ்வகையான தவத்தை மேற்கொண்டோரும் அடைதற்குரிய இலக்காய் நின்ற எம்பெருமானே! சதுரப்பாடுடைய அறிஞர்கள் வாழும் பொழில்கள் சூழ்ந்த திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக.
44 |
விண்ணிழி கோயில் விரும்பிமேவும் புண்ணிய னைப்புக லிந்நிலாவு நண்ணிய கீர்த்தி நலங்கொள்கேள்வி பண்ணியல் பாடல்வல் லார்களிந்தப் |
1.004.11 |
விண்ணிழி கோயில் விரும்பிய புண்ணியனைப் போற்றி ஞானசம்பந்தன் சொன்ன பாடல் வல்லார்கள் பாரொடு விண்ணகத்தையும் பரிபாலனம் புரிவர். புகலிப் பதியில் விளங்கும் புண்ணியனாய், அழகிய இளங்கொடி போன்ற உமையம்மையோடு விளங்குவானைத் துதித்துத் திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை விரும்பிய வித்தகம் என்னையோ சொல்லாய் என்று கேட்டுப் புகழால் மிக்கவனும் நலம்தரும் நூற்கேள்வி உடையவனும் நான்மறை வல்லவனும் ஆகிய ஞானசம்பந்தன் பாடிய பண்ணிறைந்த இப்பதிகத் திருப்பாடல்களை ஓதுபவர் நிலவுலகத்தோடு விண்ணுலகத்தையும் ஆளும் சிறப்புடையவராவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.004.திருப்புகலியும் - திருவீழிமிழலையும் , விண்ணிழி, புண்ணியனே, விளங்கும், புகலி, கோயில், நிலாவிய, விரும்பியதே, சொல்வாயாக, காரணம், திருவீழிமிழலையில், என்னையோ, கோயிலை, வென்கொல்சொல்லாய், அழகிய, உடைய, விரும்பியதற்குக், புகலியில், சூழ்மிழலை, தலைவனே, யேயிது, சுவாமிபெயர், ஆகிய, நான்மறை, திருப்புகலியும், திருவீழிமிழலையும், பெருமானே, வாழும், னெம்மிறை, திருமுறை, உமையம்மையோடு, தாங்கி, மேலும், சூழப்பெற்ற, நான்முகன், கடவுளே, தோயும், சூழ்ந்த, ஞானசம்பந்தன், போற்றும், வெம்பெரு, விரும்பிய, பொழில்களால், இலங்கையர், சூழப், மணம், பாரொடு, மானிது, எம்பெருமானே, குளிர்ந்த, பெற்ற, கொண்ட, ஈசனே, பேசும், பதிகங்கள், சிற்றிடைக், நுதலையும், தேவாரப், விழியையும், மான், அந்தணர்கள், கன்னிமார்கள், பொருந்திய, மான்விழி, விழி, தேவியார், மங்கையோடும், திருச்சிற்றம்பலம், தாமரை, மலரில், தென்கொல்சொல்லாய், பதியில்