முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.018.திருநின்றியூர்
1.018.திருநின்றியூர்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
- இலட்சுமியீசுவரர்.
தேவியார் - உலகநாயகியம்மை.
185 |
சூலம்படை சுண்ணப்பொடி பாலம்மதி பவளச்சடை காலன்வலி காலின்னொடு நீலம்மலர்ப் பொய்கைநின்றி |
1.018.1 |
முன்னொரு காலத்தில் காலனின் வலிமையைக் காலால் உதைத்துப் போக்கி, மணம் கமழும் நீல மலர்கள் மலர்ந்த பொய்கைகளை உடைய திருநின்றியூரில் நிலையாக எழுந்தருளியுள்ள இறைவற்குப் படைக்கலன் சூலம். சுண்ணப்பொடியும், சாந்தமும், திருநீறே. பால் போலும் வெண்மையான பிறைமதி அவரது செந்நிறச் சடைமுடியின் மேலது.
186 |
அச்சம்மிலர் பாவம்மிலர் நிச்சம்முறு நோயும்மிலர் நச்சம்மிட றுடையார்நறுங் பச்சம்முடை யடிகள்திருப் |
1.018.2 |
நஞ்சை மிடற்றிலே நிறுத்தித் தேவர்களைக் காத்தருளியவரும், மணம் கமழும் கொன்றை மலர்களை விரும்பிச் சூடியவரும், தம்மை வழிபடும் அடியவர்களை ஆட்கொண்டருளும் அன்புடையவரும் ஆகிய நின்றியூரில் விளங்கும் இறைவரது பாதம் பணிவார் அச்சம், பாவம், கேடு, நாள்தோறும் வரும் நோய் ஆகியன இலராவர்.
187 |
பறையின்னொலி சங்கின்னொலி அறையும்மொலி யெங்கும்மவை நிறையும்புனல் சடைமேலுடை உறையும்மிறை யல்லதென |
1.018.3 |
பறையடிக்கும் ஒலி, சங்கு முழங்கும் முழக்கம், பக்கங்களிலெல்லாம் மிகவும் ஒலிக்கும் ஏனைய ஒலிகள் ஆகியவற்றில் இறைவனது நாத தத்துவத்தை அறிவோர் உணர்வர். நிறைந்த கங்கைப் புனலைச் சடைமிசை உடையவராய் நின்றியூரில் உறையும் அவ்விறைவரை அல்லது என் உள்ளம் பிறபொருள்களுள் ஒன்றனையும் உணராது.
188 |
பூண்டவ்வரை மார்பிற்புரி ஈண்டவ்வத னோடும்மொரு தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு ஆண்டகழல் தொழலல்லது |
1.018.4 |
அணிகலன்களைப் பூண்ட மலைபோன்ற மார்பில் முப்புரி நூலை அணிந்து, விரிந்த கொன்றை மலர் மாலையையும் அதனோடும் பொருந்தப் பால் போன்ற வெண்மையான திங்களையும்சூடி, வானத்தைத் தீண்டும் பொழில்கள் சூழ்ந்த திருநின்றியூரில் எழுந்தருளி, நம்மை ஆண்டருளிய அவ்விறைவன் திருவடிகளைத் தொழுதல் அல்லது, அவன் இயல்புகளை அடியவர் எவரும் அறியார்.
189 |
குழலின்னிசை வண்டின்னிசை நிழலின்னெழில் தாழ்ந்தபொழில் அழலின்வல னங்கையது கழலின்னொலி யாடும்புரி |
1.018.5 |
குழலிசை வண்டிசை ஆகியவற்றைக் கேட்டுக் குயில்கள் கூவுவதும், நிழலின் அழகு தங்கியதுமாகிய பொழில்களால் சூழப்பட்ட நின்றியூரிடத்து அழலை வலத் திருக்கரத்தில் ஏந்தி அனலிடை நின்று கழல்களின் ஒலிகள் கேட்குமாறு ஆடும் இறைவன் நமக்குக் களைகண் ஆவான்.
190 |
மூரன்முறு வல்வெண்ணகை சாரன்மதி யதனோடுடன் வீரன்மலி யழகார்பொழில் யூரன்கழ லல்லாதென |
1.018.6 |
புன்முறுவலைத் தரும் வெண்மையான பற்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, சடைமுடியில் சார்ந்துள்ள பிறைமதியோடு கங்கையை வைத்துள்ள வீரனும் அழகு மலிந்த பொழில்கள் செறிந்த திருநின்றியூரில் எழுந்தருளியவனுமாகிய சிவபிரான் திருவடிகளை அல்லாது எனது உள்ளம் வேறு ஒன்றையும் உணராது.
191 |
பற்றியொரு தலைகையினி பெற்றியது வாகித்திரி சுற்றியொரு வேங்கையத நெற்றியொரு கண்ணார்நின்றி |
1.018.7 |
பிரமனது தலைகளில் ஒன்றைப் பறித்து அதனைக் கையினில் ஏந்திப் பலிகேட்கும் இயல்பினராய்த் திரிகின்ற தேவர் தலைவரும் புலித்தோலை இடையில் சுற்றியிருப்பதோடு முடியில் பிறைமதியைச் சூடியவரும், நெற்றியில் ஒரு கண்ணை உடையவரும் ஆகிய பெருமானார் திருநின்றியூரின்கண் நிலையாக எழுந்தருளியுள்ளார்.
இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 1.009.8 |
192 |
நல்லம்மலர் மேலானொடு அல்லரென வாவரென நெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி செல்வரடி யல்லாதென |
1.018.9 |
நல்ல தாமரை மலர்மேல் உறையும் நான்முகனோடு உலகைத் தன் வயிற்றகத்து அடக்கிக் காட்டிய திருமாலும், சிவபிரானே முழுமுதற் பொருள் ஆவர் எனவும் அல்லர் எனவும் கூறிக்கொண்டு தேடிக் காணுதற்கரியவராய் நின்றவரும் நெல்வயல்களால் சூழப்பட்ட நின்றியூரில் நிலையாக எழுந்தருளிய எம் செல்வருமாகிய சிவபிரான் திருவடிகளை அல்லது என் சிந்தை வேறொன்றையும் உணராது.
193 |
நெறியில்வரு பேராவகை அறிவில்சமண் ஆதருரை நெறியில்லவர் குறிகள்நினை மறியேந்திய கையானடி |
1.018.10 |
சமய நெறியில் பயில்வதால் பேராமலும் மறவாமலும் நினைக்கும் முழுமுதற்பொருளை அறியும் அறிவற்றசமணர்களாகிய நெறியற்ற கீழ்மக்களின் உரைகளைக் கேட்டு மயங்காமலும், தமக்கென்று உண்மை நெறியல்லாத புறச் சமயிகளின் அடையாளங்களைக் கருதாமலும் நின்றியூரில் மான் ஏந்திய கையனாய் விளங்கும் இறைவன் திருவடிகளை வாழ்த்துவதே வாழ்த்தாகும்.
194 |
குன்றம்மது வெடுத்தானுடல் நின்றங்கொரு விரலாலுற நன்றார்தரு புகலித்தமிழ் குன்றாத்தமிழ் சொல்லக்குறை |
1.018.11 |
கயிலைமலையை எடுத்த இராவணனின் உடல்தோள் ஆகியன நெரியத் தன் கால்விரல் ஒன்றால் ஊன்றியவனது நின்றியூர் மீது, நன்மைகளையே செய்யும் புகலிப் பதியில் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் உரைத்த திருவருள் நலம் குன்றாத இத்திருப்பதிகப் பாடல்களை உரைப்பதனால் குறைவின்றிப் புகழ் நிறையும்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.018.திருநின்றியூர் , நின்றியூரில், யூரில், வெண்மையான, நிலையாக, திருமுறை, உணராது, அல்லது, கொன்றை, திருநின்றியூரில், கமழும், ராதே, திருநின்றியூர், யூரின்னிலை, திருவடிகளை, பொழில்கள், எனவும், உள்ளம், சிவபிரான், இறைவன், அழகு, சூழப்பட்ட, சூழ்ந்தநின்றி, ஆகிய, பாலம்மதி, மணம், திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தேவாரப், உடைய, பால், ஒலிகள், ஆகியன, விளங்கும், சூடியவரும், உறையும்