முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.016.திருப்புள்ளமங்கை - திரு ஆலந்துறை
1.016.திருப்புள்ளமங்கை - திரு ஆலந்துறை
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பசுபதிநாயகர்.
தேவியார் - பால்வளைநாயகியம்மை (எ) பல்வளைநாயகியம்மை.
163 |
பாலுந்துறு திரளாயின போலுந்திற லவர்வாழ்தரு காலன்றிற லறச்சாடிய ஆலந்துறை தொழுவார்தமை |
1.016.1 |
பாலினின்று மிதந்து வரும் வெண்ணெய்த் திரள் போல்பவரும், காலனது வலிமை முழுவதையும் அழித்தவரும், வேதப் புலமையில் நான்முகன் போன்ற அந்தணர் வாழும் பொழில்கள் சூழ்ந்த திருப்புள்ளமங்கையில் விளங்குபவரும் ஆகிய இறைவனை நினைந்து வழிபடுபவர்களை வினைகள் அடையா.
164 |
மலையான்மகள் கணவன்மலி புலையாயின களைவானிடம் கலையான்மலி மறையோரவர் அலையார்புனல் வருகாவிரி |
1.016.2 |
இமவான் மகளாகிய பார்வதி தேவியின் கணவனும் நீர் நிறைந்த கடல் சூழ்ந்த குளிர்ந்த இவ்வுலகில் உடலோடு பிறக்கும் பிறப்பைக் களைபவனும் ஆகிய சிவபெருமானது இடம், கலைகள் பலவற்றை அறிந்த அறிவால் நிறைந்த மறையவர்கள் மனத்தால் கருதிக் காயத்தால் தொழுது வாயால் ஏத்தி வழிபடுவதும், பொழில் சூழ்ந்ததும் அலைகளோடு கூடி நீர்பெருகி வரும் காவிரிக் கரையிலுள்ளதும் ஆகிய ஆலந்துறை என்னும் தலத்திலுள்ள புள்ள மங்கை என்னும் கோயிலாகும்.
165 |
கறையார்மிட றுடையான்கமழ் பொறையார்தரு கங்கைப்புன சிறையார்தரு களிவண்டறை துறையானவ னறையார்கழல் |
1.016.3 |
விடக்கறை பொருந்திய கண்டத்தை உடையவனும், மணம் கமழும் கொன்றை மலர் அணிந்த சடைமுடியின்மீது சுமையாக அமைந்த கங்கையாற்றை அணிந்தவனுமாய சிவபிரானுக்குரியது, சிறகுகளுடன் கூடிய மதுவுண்ட வண்டுகள் ஒலிக்கும் பொழில்களால் சூழப்பட்ட ஆலந்துறையிலுள்ள புள்ளமங்கை என்னும் கோயிலாகும். அக்கோயிலுக்குச் சென்று அப்பெருமானது திருவடிகளைத் துதி செய்து தொழுவீராக.
166 |
தணியார்மதி யரவின்னொடு பணியாயவ னடியார்தொழு மணியார்தரு கனகம்மவை அணியார்மண லணைகாவிரி |
1.016.4 |
தண்ணிய பிறைமதியைப் பாம்போடு முடிமிசை வைத்துள்ள சிவபெருமானது இடம், அடியவர்கள் எமது தொண்டுகளுக்குரியவன் எனத் தொழுது ஏத்துவதும், மணிகளோடு கூடிய பொன்னை வயிரக்குவைகளோடும், அழகிய மணலோடும் கொணர்ந்து சேர்க்கும் காவிரியின் தென்கரையிலுள்ளதுமான ஆலந்துறையில் அமைந்த புள்ளமங்கையாகும்.
167 |
மெய்த்தன்னுறும் வினைதீர்வகை கொத்தின்னொடு சந்தாரகில் பொத்தின்னிடை யாந்தைபல அத்தன்நமை யாள்வானிடம் |
1.016.5 |
உயிர் உடலை அடுத்தற்குக் காரணமான வினைகள் நீங்கும் வகையில் பெருமானை நீவிர் வணங்குவீர்களாக. செழுமையான மலர்க் கொத்துக்களை உடைய சந்தனம், அகில் முதலியவற்றைக் கொண்டு வரும் காவிரியாற்றின் கரைமேல் உள்ளதும் பொந்துகளில் ஆந்தைகள் பல தங்கிப் பாடுவதும் ஆகிய ஆலந்துறையில் அமைந்த புள்ளமங்கை என்னும் கோயிலை இடமாகக் கொண்டுள்ள தலைவனாகிய சிவபெருமான் நம்மை ஆள்வான்.
168 |
மன்னானவ னுலகிற்கொரு பொன்னானவன் முதலானவன் என்னானவ னிசையானவ அன்னானவ னுறையும்மிடம் |
1.016.6 |
உலகிற்குத் தான் ஒருவனே மன்னனாய் விளங்குபவனும், மழையாய்ப் பயிர்களை விளைவிப்பவனும், குற்றமற்ற பொன்னானவனும், உயிர்களுக்கு வாழ்முதலாக உள்ளவனும், எனக்குத் தலைவனாய் இசை வடிவாக விளங்குபவனும், இளஞாயிற்றின் ஒளியைப் போன்ற ஒளியினனுமாகிய சிவபெருமான் உறையும் இடம், ஆலந்துறையிலுள்ள புள்ளமங்கையாகும்.
169 |
முடியார்தரு சடைமேன்முளை பொடியாடிய திருமேனியர் கடியார்மலர் புனல்கொண்டுதன் அடியார்தமக் கினியானிடம் |
1.016.7 |
தலைமேல் விளங்கும் சடைமிசை முளை போன்ற இளம்பிறையைச் சூடி வெள்ளிய திருநீறு அணிந்த திருமேனியனாய், மணம் கமழும் மலர்களையும் நீரையும் கொண்டு தன் திருவடிகளை வணங்கி ஏத்தும் அடியார்களுக்கு இனியனாய் விளங்கும் சிவபெருமான் விரும்பி உறையும் இடம் பொழில் சூழ்ந்த ஆலந்துறையிலுள்ள புள்ளமங்கை என்னும் கோயிலாகும்.
170 |
இலங்கைமனன் முடிதோளிற விலங்கல்லிடை யடர்த்தானிடம் புலன்கள்தமை வென்றார்புக அலங்கல்மலி சடையானிடம் |
1.016.8 |
இலங்கை மன்னனாகிய இராவணனின் தலைகளும், தோள்களும் நெரிய, எழுச்சி பொருந்திய அழகிய கால்விரலால் கயிலை மலையிடை அகப்படுத்தி அவனை அடர்த்த சிவபெருமானது இடம், வேதங்களை முறையாகக் கற்றறிந்து ஓதித் துதித்தலோடு புலன்களை வென்ற புகழுடைய அந்தணர் வாழ்வதும் மாலை அணிந்த சடைமுடி உடைய சிவபிரானுக்கு இடமாயிருப்பதும் ஆகிய ஆலந்துறையிலுள்ள புள்ளமங்கையாகும்.
171 |
செறியார்தரு வெள்ளைத்திரு பொறியார்தரு புரிநூல்வரை வெறியார்தரு கமலத்தயன் அறியாவகை நின்றானிடம் |
1.016.9 |
வெண்மையான திருநீறு மூன்று பட்டைகளாய்ச் செறிய உத்தம இலக்கணம் ஆகிய மூன்று வரி பொருந்திய, முப்புரிநூல் அணிந்த மலை போன்ற திண்ணிய மார்பினை உடையவனும் மணம் கமழும் தாமரை மலர்மேல் உறையும் நான்முகன், திருமால் ஆகியோர் தன்னைத் தேடி அறியாவகை ஓங்கி நின்றவனுமாகிய சிவபெருமானுக்கு உரிய இடம், ஆலந்துறையிலுள்ள புள்ள மங்கையாகும்.
172 |
நீதியறி யாதாரமண் போதியவ ரோதும்முரை ஆதியவர் கோயில்திரு சாதிம்மிகு வானோர்தொழு |
1.016.10 |
நீதி அறியாத அமணராகிய கீழ் மக்களும் பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்திப் போதிமரத்தடியில் உறையும் புத்த மதத்தினரும் கூறும் உரைகளை மெய்ம்மை எனக் கொள்ளாது எல்லாப் பொருள்கட்கும் ஆதியானவனாகிய ஆலந்துறைப் புள்ளமங்கைக் கோயிலில் உறையும் இறைவனைத் தொழுமின்; பல்வேறு பிரிவினராகிய தேவர்கள் தொழும் தன்மை பெறலாம்.
173 |
பொந்தின்னிடைத் தேனூறிய அந்தண்புனல் வருகாவிரி கந்தம்மலி கமழ்காழியுட் சந்தம்மலி பாடல்சொலி |
1.016.11 |
மரப்பொந்துகளில் தேனீக்கள் சேகரித்த தேன் மிகுதியான அளவில் கிடைக்கும் பொழில்கள் சூழ்ந்ததும், அழகிய தண்மையான நீரைக் கொணர்ந்துதரும் காவிரிக்கரையில் உள்ளதும் ஆகிய ஆலந்துறைப் புள்ளமங்கை இறைவனை, மணம் நிறைந்து கமழும் காழிப் பதியில் தோன்றிய கலை நலம் உடைய ஞானசம்பந்தன் பாடிய சந்தம் நிறைந்த இத்திருப்பதிகப் பாடல்களை ஓதிப் பரவசமாய் ஆடத் தவம் கைகூடும்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.016.திருப்புள்ளமங்கை - திரு ஆலந்துறை , ஆலந்துறை, மங்கை, ஆகிய, யதுவே, இடம், உறையும், ஆலந்துறையிலுள்ள, பொழில்சூழ்புள, என்னும், மணம், அணிந்த, கமழும், புள்ளமங்கை, உடைய, அழகிய, திருமுறை, கோயிலாகும், அமைந்த, பொருந்திய, புள்ளமங்கையாகும், திரு, சிவபெருமானது, வரும், நிறைந்த, சூழ்ந்த, யாலந்துறை, சிவபெருமான், திருப்புள்ளமங்கை, மங்கைக், திருநீறு, அறியாவகை, விளங்கும், மூன்று, தொழுமின், கொண்டு, உள்ளதும், ஆலந்துறையில், ஆலந்துறைப், விளங்குபவனும், கரைமேல், புள்ள, அந்தணர், பொழில்கள், நான்முகன், திருச்சிற்றம்பலம், தேவாரப், பதிகங்கள், இறைவனை, வினைகள், சூழ்ந்ததும், உடையவனும், பொழில், தொழுது, வருகாவிரி, கூடிய