முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.128.திருவெழுகூற்றிருக்கை
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
1382 |
ஓருரு வாயினை மானாங் காரத் தீரியல் பாயொரு விண்முதல் பூதலம் ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும் படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை இருவரோ டொருவ னாகி நின்றனை |
05 |
ஓரா னீழ லொண்கழ லிரண்டும் |
10 | |
நாற்கான் மான்மறி யைந்தலை யரவம் |
15 | |
கொன்று தலத்துற வவுணரை யறுத்தனை |
20 | |
நான்மறை யோதி யைவகை வேள்வி |
25 | |
இகலிய மைந்துணர் புகலி யமர்ந்தனை
|
30 | |
வரபுர மொன்றுணர் சிரபுரத் துறைந்தனை |
35 | |
ஐயுறு மமணரு மறுவகைத் தேரரும் |
40 | |
மூன்று காலமுந் தோன்ற நின்றனை
இருமையி னொருமையு மொருமையின் பெருமையும் மறுவிலா மறையோர் கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை கழுமல முதுபதிக் கவுணிய னறியும் |
45 | |
அனைய தன்மையை யாதலி னின்னை நினைய வல்லவ ரில்லைநீ ணிலத்தே. |
சொரூப நிலையில் விளங்கும் பரசிவம் ஆகிய நீ உனது இச்சையால் ஐந்தொழில்களை நிகழ்த்த வேண்டி எடுத்துக் கொண்ட ஓருருவமாகிய திருமேனியை உடையை ஆயினை, உன் சக்தியைக் கொண்டு அவ் ஐந்தொழில்களை நடத்தும் திருவுளக் குறிப்போடு சத்தி சிவம் என்னும் இரு உருவாயினை, விண் முதலிய பூதங்களையும் சந்திர சூரியர்களையும் தேவர்கள் மக்கள் முதலியோரையும் படைத்துக் காத்து அழிக்க அயன் அரி அரன் என்னும் மும்மூர்த்திகள் ஆயினை, பிரமன் திருமால் ஆகிய இருவரையும் வலத்திலும் இடத்திலும் அடக்கி ஏக மூர்த்தியாக நின்றாய், ஒப்பற்ற கல்லால மர நிழலில் உனது இரண்டு திருவடிகளை முப்பொழுதும் ஏத்திய சனகர், சனந்தனர் முதலிய நால்வர்க்கு ஒளி நெறியைக் காட்டினாய். சூரியன் சந்திரன் அக்கினி ஆகியோரை மூன்று கண்களாகக் கொண்டு உலகை விழுங்கிய பேரிருளை ஓட்டினாய். கங்கையையும் பாம்பையும் பிறைமதியையும் முடிமிசைச் சூடினாய், ஒரு தாளையும் ஈருகின்ற கூர்மையையும் முத்தலைகளையும் உடைய சூலத்தையும் நான்கு கால்களையும் உடைய மான் கன்று, ஐந்து தலை அரவம் ஆகியவற்றையும் ஏந்தினாய், சினந்து வந்த, தொங்கும் வாயையும் இரு கோடுகளையும் கொண்ட ஒப்பற்ற யானையை அதன் வலி குன்றுமாறு அழித்து அதன் தோலை உரித்துப் போர்த்தாய்.
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.128.திருவெழுகூற்றிருக்கை , நின்றனை, யமர்ந்தனை, திருமுறை, திருவெழுகூற்றிருக்கை, ஐந்தொழில்களை, ஆயினை, கொண்ட, கொண்டு, என்னும், உடைய, ஒப்பற்ற, முதலிய, உனது, கழுமல, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தேவாரப், யொருங்கிய, துறைந்தனை, முதுபதிக், மூன்று, ஆகிய