புலம்பல் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 4
2 பேத்: பத்தரை மாற்றுத் தங்கத்துக் கொத்த சீயோனின் சிறந்த மக்கள், குயவனது கைவேலைப்பாடான மட்கலங்கள் போல் எண்ணப்பட்டது எவ்வாறோ?
3 கீமேல்: குள்ளநரிகள் கூட முலை காட்டித் தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுக்கின்றன@ ஆனால் என் மக்களினமாகிய மகள் கொடியளாகிப் பாலைநிலத்தில் தீக் கோழியானாள்.
4 தாலேத்: பால் குடிக்கும் குழந்தையின் நாக்கு தாகத்தால் அன்னத்தில் ஒட்டிக்கொண்டது@ சிறுவர்கள் உணவு கேட்கிறார்கள், அவர்களுக்குக் கொடுப்பார் ஒருவருமில்லை.
5 ஹே: அறுசுவையோடு உண்டவர்கள் தெருக்களில் திக்கற்று மடிகிறார்கள்@ மெல்லிய பட்டாடை உடுத்தியவர்கள் குப்பை மேட்டில் கிடக்கின்றனர்.
6 வெள: ஒருவரும் கைவைக்காமல் நொடிப்பொழுதில் கவிழ்ந்து போன சோதோமின் பாவத்தை விட என்னுடைய இனத்தாராம் மகளுடைய அக்கிரமம் மிகப் பெரியது.
7 ஸாயின்: அந்நகரின் பெருங்குடி மக்கள் பனிக்கட்டியிலும் வெண்மையாயும், பாலை விடத் தூய்மையாயும், பவளத்தை விடச் சிவப்பாயும், நீல மணியிலும் சிறப்பாயும் இருந்தனர்.
8 ஹேத்: அவர்கள் முகம் இப்பொழுது கரியை விடக் கறுத்து விட்டது@ தெருக்களில் அடையாளம் தெரியவில்லை@ அவர்கள் தசை எலும்போடு ஒட்டிக்கொண்டது@ காய்ந்த மரம்போல் உலர்ந்து போனது.
9 தேத்: பசியால் மடிந்தவர்களைக் காட்டிலும் வாளால் மாண்டவர்கள் பேறு பெற்றோர்@ ஏனெனில் முன்னவர் பூமியின் வறட்சியால் கொஞ்சம் கொஞ்சமாய் மாய்ந்து மடிந்தார்கள்.
10 இயோத்: இரக்கமுள்ள பெண்களும் தங்கள் கையாலேயே தங்களின் பிள்ளைகளைக் கொதிக்க வைத்தனர்@ என் இனத்தாரான மகளின் நெருக்கடியில் பிள்ளைகள் தாய்மார்க்கு உணவாயின.
11 காஃப்: ஆண்டவர் தம் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டார், தமது கோபத்தின் தீயைக் கொட்டி விட்டார்@ சீயோனில் நெருப்பையும் மூட்டிவிட்டார், அதன் அடிப்படைகளையும் அது விழுங்கி விட்டது.
12 லாமேத்: பகைவரும் எதிரிகளும் யெருசலேமின் வாயில்களில் நுழைவாரென்று, பூமியின் அரசர்களும் உலகத்தின் குடிமக்களும் எவருமே நினைக்கவில்லை.
13 மேம்: அதன் நடுவில் நீதிமான்களின் இரத்தத்தைச் சிந்திய தீர்க்கதரிசிகளின் பாவமும், அர்ச்சகர்களின் அக்கிரமமுமே இவை நேர்ந்தமைக்குக் காரணம்.
14 நூன்: குருடரைப் போலத் தெருக்களில் தடுமாறினார்கள், இரத்தக் கறையால் தீட்டுப்பட்டார்கள்@ ஆதலால் அவர்களுடைய ஆடைகளை யாராலும் தொட முடியவில்லை.
15 சாமேக்: "விலகுங்கள், தீட்டு, விலகுங்கள், எட்டிப்போங்கள், தொடாதீர்கள்" என்று அவர்களிடம் கூவினார்கள்@ அவர்களும் நாடோடிகளாய் அலைந்து திரிந்தனர்@ "இனி நம்முடன் குடியிரார் " என வேற்றினத்தார் கூறினர்.
16 பே: ஆண்டவர் அவர்களைத் தம் திருமுன்னிருந்து அகற்றினார், மீண்டும் அவர்களைக் கண்ணோக்க மாட்டார்@ தங்கள் அர்ச்சகர்களை மக்கள் மதிக்கவில்லை, மூப்பர்கள்மேல் அவர்கள் இரங்கவில்லை.
17 ஆயீன்: நாங்கள் வீணில் உதவியை எதிர்பார்த்து, எங்கள் கண்களும் பூத்துப் போயின@ எங்களை விடுவிக்க இயலாத மக்களை காவல் கோட்டை மேலிருந்து எதிர்பார்த்தோம்.
18 சாதே: பகைவர் நம் நடமாட்டங்களை விழிப்புடன் நோக்கினர், வீதிகளில் நாம் நடக்காதபடி தடுத்தனர்@ முடிவு நமக்குக் கிட்டிவிட்டது, நம் நாட்கள் எண்ணப்பட்டு விட்டன@ ஏனெனில், நமது முடிவு வந்துவிட்டது.
19 கோப்: வானத்தின் பருந்துகளை விட நம்மைத் துன்புறுத்துகிறவர்கள் விரைந்து வருகின்றனர்@ மலைகளின் மேல் நம்மைத் துரத்தி வருகின்றனர், பாலைநிலத்தில் நமக்கும் கண்ணி வைத்தனர்.
20 ரேஷ்: ஆண்டவரால் அபிஷேகம் செய்யப்பட்டு நமக்கு வாழ்வின் மூச்சாய் இருந்தவர் அவர்களுடைய படுகுழியில் பிடிபட்டார்@ "புறவினத்தார் நடுவில் உம் நிழலில் வாழ்வோம்" என்று அவரைக் குறித்தே நாம் சொல்லி வந்தோம்.
21 ஷின்: ஊஸ் நாட்டில் வாழும் ஏதோம் மகளே, அகமகிழ்ந்து அக்களிப்பாய் இருக்கிறாயோ? உனக்கும் துன்பத்தின் பாத்திரம் வரும், நீயும் போதையேறி மானமிழப்பாய்.
22 தௌ: சீயோன் மகளே, உன் அக்கிரமம் நிறைவுற்றது, இனி உன்னை நாடுகடத்த மாட்டார்@ ஏதோம் மகளே, உன் அக்கிரமத்தைத் தண்டிப்பார், உன் பாவங்களை வெளிப்படுத்துவார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புலம்பல் ஆகமம் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, புலம்பல், பழைய, ", தெருக்களில், மக்கள், தங்கள், மகளே, ஆகமம், அவர்களுடைய, விலகுங்கள், ஏதோம், மாட்டார்@, நடுவில், முடிவு, நாம், நம்மைத், அக்கிரமம், சிறந்த, ஆன்மிகம், திருவிவிலியம், பால், பாலைநிலத்தில், பூமியின், ஏனெனில், ஒட்டிக்கொண்டது@, ஆண்டவர்