அருளப்பர் எழுதிய முதலாவது நிருபம் - புதிய ஏற்பாடு
அதிகாரம் 3
2 அன்புக்குரியவர்களே, இப்போது நாம் கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் வெளிப்படும்போது, அவரைப்போலவே நாமும் இருப்போம் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.
3 அவர்மேல் இந்த நம்பிக்கை கொள்ளும் எவனும் அவர் குற்றமற்றவராய் இருப்பதுபோலத் தன்னையும் குற்றமற்றவனாய்க் காத்துக் கொள்வான்.
4 பாவஞ்செய்கிற எவனும் திருச்சட்டத்தை மீறுகிறான். ஏனெனில் திருச்சட்டத்தை மீறுதலே பாவம்
5 பாவங்களைப் போக்குவதற்காகவே அவர் தோன்றினார் என்று உங்களுக்குத் தெரியும். அவரிடமோ பாவமென்பது இல்லை.
6 அவருள் நிலைத்திருக்கிற எவனும் பாவத்திலே வாழ்வதில்லை@ பாவத்தின் வாழும் எவனும் அவரைக் கண்டதுமில்லை, அறிந்ததுமில்லை.
7 அன்புக் குழந்தைகளே, எவனும் உங்களை ஏமாற்ற இடங்கொடாதீர்கள். இறைவனுக்கு ஏற்புடையதைச் செய்பவனே கிறிஸ்து இறைவனுக்கு எற்புடையவராய் இருப்பதுபோல, தானும் ஏற்புடையவனாய் இருக்கிறான்.
8 பாவஞ்செய்பவன் அலகையைச் சார்ந்தவன்@ ஏனெனில் அலகை ஆதிமுதல் பாவஞ்செய்துகொண்டு வருகிறது. இவ்வலகையின் செயல்களைத் தொலைக்கவே கடவுளின் மகன் தோன்றினார்.
9 கடவுளிடமிருந்து பிறந்தவன் பாவஞ்செய்வதில்லை@ ஏனெனில் அவர் இட்ட வித்து அவனுக்குள் நிலைத்திருக்கிறது. அவன் பாவத்தில் வாழமுடியாது@ ஏனெனில் அவன் கடவுளிடமிருந்து பிறந்திருக்கிறான்.
10 இறைவனுக்கு ஏற்புடையதைச் செய்யாதவனும், தன் சகோதரனுக்கு அன்பு செய்யாதவனும் கடவுளிடமிருந்து வந்தவன் அல்லன். இதனின்று, கடவுளின் மக்கள் யாரென்றும் அலகையின் மக்கள் யாரென்றும் புலப்படும்.
11 தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்த செய்தி இதுவே@ நாம் ஒருவர்க்கு ஒருவர் அன்பு செய்ய வேண்டும்.
12 காயீனைப்போல் இராதீர்கள்@ தீயோனைச் சார்ந்த அவன் தன் தம்பியைக் கொன்றான். ஏன் அவனைக் கொன்றான்? அவனுடைய செயல்கள் தீயனவாகவும், அவன் தம்பியின் செயல்கள் நல்லனவாகவும் இருந்தன.
13 சகோதரர்களே, உலகம் உங்களை வெறுக்கிறதென்றால் வியப்புறவேண்டாம்.
14 சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்துவந்துள்ளோம்@ நாம் நம் சகோதர்களுக்கு அன்புசெய்வதால் அதை அறிகிறோம். அன்பு செய்யாதவன் சாவில் நிலைகொள்ளுகிறான்.
15 தன் சகோரதனை வெறுக்கிற எவனும் கொலைகாரன். கொலைகாரன் எவனிடத்திலும் முடிவில்லா வாழ்வு நிலைத்திருப்பதில்லை@ இது உங்களுக்குத் தெரியும்.
16 கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார்@ இதனால் அன்பு இன்னதென்று அறிந்தோம். ஆகவே நாமும் நம்முடைய சகோதரர்களுக்காக நம் உயிரைக் கொடுக்கவேண்டும்.
17 இவ்வுலக செல்வங்களை உடையவன் ஒருவன், தன் சகோதரன் வறுமையுற்றிருப்பதைக் கண்டு. மனமிரங்காவிடில், அவனுள் கடவுளன்பு நிலைத்திருக்கிறதென்று எவ்வாறு சொல் முடியும்?
18 அன்புக் குழந்தைகளே, நம் அன்பு சொல்லிலும் பேச்சிலும் இராமல், செயலில் விளங்கும் உண்மையான அன்பாய் இருக்கட்டும்.
19 இதனால் நாம் உண்மையைச் சார்ந்தவர்கள் என்றறிவதோடு, அவர்முன் நம் மனச்சான்றை அமைதிப்படுத்த முடியும்.
20 ஏனெனில், நம் மனச்சான்று நம்மைக் கண்டனம் செய்தால், நம் மனச்சான்றை விடக் கடவுள் மேலானவர், அனைத்தையும் அறிபவர் என்பதை நினைவில் கொள்வோம்.
21 அன்புக்குரியவர்களே, நம் மனச்சான்று நம்மைக் கண்டனம் செய்யாதிருந்தால், கடவுள் முன் நாம் நம்பிக்கையோடு நிற்க முடியும்.
22 அப்போதுதான் நாம் கேட்பதையெல்லாம் அவரிடமிருந்து பெறுவோம். ஏனெனில், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவருக்குகந்ததைச் செய்கிறோம்.
23 நாம் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவின் பெயர்மீது விசுவாசம் வைத்து, அவர் தந்த கட்டளைப்படி ஒருவர்க்கொருவர் அன்பு செய்ய வேண்டும்@ இதுவே அவரது கட்டளை.
24 அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவன் அவருள் நிலைத்திருக்கிறான்@ அவரும் அவனுள் நிலைத்திருக்கிறார்@ அவர் நம்முள் நிலைத்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய ஆவியினால் அறிகிறோம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அருளப்பர் எழுதிய முதலாவது நிருபம் - புதிய ஏற்பாடு, நாம், அவர், ஏனெனில், அன்பு, எவனும், ஏற்பாடு, கடவுளின், அவருடைய, அவன், கடவுளிடமிருந்து, நிருபம், முடியும், எழுதிய, இறைவனுக்கு, மக்கள், முதலாவது, அருளப்பர், செயல்கள், அறிகிறோம், கொன்றான், கொலைகாரன், யாரென்றும், செய்ய, செய்யாதவனும், மனச்சான்றை, கடவுள், என்பதை, கட்டளைகளைக், கண்டனம், நம்மைக், இதனால், அவனுள், மனச்சான்று, உயிரைக், அவருள், அன்புக்குரியவர்களே, இருப்போம், நாமும், உலகம், இருக்கிறோம், திருவிவிலியம், ஆன்மிகம், மக்களாகவே, அவரைக், திருச்சட்டத்தை, உங்களை, ஏற்புடையதைச், கிறிஸ்து, குழந்தைகளே, அன்புக், தோன்றினார், உங்களுக்குத், தெரியும், மகன்