நான்காவது அத்தியாயம் (ஞான கர்ம சன்யாச யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
தைவமேவாபரே யஜ்ஞம் யோகிந: பர்யுபாஸதே। ப்ரஹ்மாக்நாவபரே யஜ்ஞம் யஜ்ஞேநைவோபஜுஹ்வதி॥ 4.25 ॥ |
சில யோகிகள் தெய்வ வழிபாட்டையே வேள்வியாக செய்கிறார்கள். வேறு சிலர் வாழ்க்கையின் மூலம் வாழ்க்கையையே இறைவனாகிய அக்னியில் ஆஹிதியாக அளிக்கிறார்கள் .
ஷ்ரோத்ராதீநீந்த்ரியாண்யந்யே ஸம்யமாக்நிஷு ஜுஹ்வதி। ஷப்தாதீந்விஷயாநந்ய இந்த்ரியாக்நிஷு ஜுஹ்வதி॥ 4.26 ॥ |
சிலர் செவி முதலிய புலன்களை கட்டுபடுத்துதல் என்ற அக்னியில் சமர்ப்பிக்கிறார்கள். சிலர் கேட்டல் முதலிய விஷயங்களை புலன்கள் என்ற அக்னியில் சமர்ப்பிக்கிறார்கள்.
ஸர்வாணீந்த்ரியகர்மாணி ப்ராணகர்மாணி சாபரே। ஆத்மஸம்யமயோகாக்நௌ ஜுஹ்வதி ஜ்ஞாநதீபிதே॥ 4.27 ॥ |
சிலர் உணர்வொளி வீசுகின்ற ஆன்மாவில் மனத்தை நிலைநிருத்துவதாகிய யோகம் என்ற அக்னியில் எல்லா புலன்களின் செயல்பாடுகளையும் பிராணனின் செயல்பாடுகளையும் சமர்ப்பிக்கிறார்கள்.
த்ரவ்யயஜ்ஞாஸ்தபோயஜ்ஞா யோகயஜ்ஞாஸ்ததாபரே। ஸ்வாத்யாயஜ்ஞாநயஜ்ஞாஷ்ச யதய: ஸம்ஷிதவ்ரதா:॥ 4.28 ॥ |
அப்படியே சுயகட்டுப்பாடு உடைய, உறுதியான சங்கல்பத்தை உடைய சிலர் தானத்தை வேள்வியாக செய்கிறார்கள். சிலர் தவத்தை வேள்வியாக செய்கிறார்கள். சிலர் யோகத்தை வேள்வியாக செய்கிறார்கள். சிலர் கற்பதையும் அறிவை பெறுவதையும் வேள்வியாக செய்கிறார்கள்.
அபாநே ஜுஹ்வதி ப்ராணம் ப்ராணே அபாநம் ததாபரே। ப்ராணாபாநகதீ ருத்த்வா ப்ராணாயாமபராயணா:॥ 4.29 ॥ |
உணவு கட்டுப்பாடு உடைய சிலர் அபானானில் பிராணனையும், பிரானனில் அபானனையும் சமர்ப்பிக்கிறார்கள். சிலர் பிராணன் மற்றும் அபாணனின் போக்கை தடுத்து பிராணாயாமம் செய்வதில் ஈடுபடுகிறார்கள்.சிலர் பிராணனின் செயல்பாடுகளை பிரானனில் சமர்ப்பிக்கிறார்கள்.
அபரே நியதாஹாரா: ப்ராணாந்ப்ராணேஷு ஜுஹ்வதி। ஸர்வே அப்யேதே யஜ்ஞவிதோ யஜ்ஞக்ஷபிதகல்மஷா:॥ 4.30 ॥ |
வேள்வியை அறிந்த அனைவரும் வேள்வியால் குறைகள் நீங்க பெறுகிறார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காவது அத்தியாயம் (ஞான கர்ம சன்யாச யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, சிலர், சமர்ப்பிக்கிறார்கள், செய்கிறார்கள், வேள்வியாக, யோகம், அக்னியில், பகவத்கீதை, சன்யாச, உடைய, அத்தியாயம், நான்காவது, கர்ம, ஸ்ரீமத், செயல்பாடுகளையும், பிராணனின், bhagavad, ஜுஹ்வதி, பிரானனில், gita, இந்து, ஜுஹ்வதி।, முதலிய, யஜ்ஞம்