நான்காவது அத்தியாயம் (ஞான கர்ம சன்யாச யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத। அப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம்॥ 4.7 ॥ |
பரத குலத்தில் பிறந்தவனே ! எப்போதெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் ஓங்குகிறதோ அப்போதெல்லாம் என்னை நான் பிறப்பித்து கொள்கிறேன்.
பரித்ராணாய ஸாதூநாம் விநாஷாய ச துஷ்க்ருதாம்। தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே॥ 4.8 ॥ |
நல்லவர்களை காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலைநாட்டவும் யுகந்தோரும் நான் தோன்றுகிறேன் .
ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:। த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோ அர்ஜுன॥ 4.9 ॥ |
அர்ஜுனா எனது மேலான பிறப்பையும் செயல்பாட்டையும் இவ்வாறு யார் உள்ளது உள்ளபடி அறிந்து கொள்கிறானோ அவன் உடம்பை விட்ட பிறகு மீண்டும் பிறப்பதில்லை என்னை அடைகிறான்.
வீதராகபயக்ரோதா மந்மயா மாமுபாஷ்ரிதா:। பஹவோ ஜ்ஞாநதபஸா பூதா மத்பாவமாகதா:॥ 4.10 ॥ |
ஆசை, பயம், கோபம், நீங்கிய என்னால் நிறைக்கபட்ட என்னை சரணடைந்த, ஞானத்தாலும் தவத்தாலும் புனிதமான பலர் என் இயல்பை அடைந்தார்கள்.
யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்। மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஷ:॥ 4.11 ॥ |
யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ, அவர்களை அப்படியே நான் வழி நடத்துகிறேன். அர்ஜுனா மனிதர்கள் என்னுடைய வழியையே எப்போதும் பின்பற்றுகின்றனர்.
காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா:। க்ஷிப்ரம் ஹி மாநுஷே லோகே ஸித்திர்பவதி கர்மஜா॥ 4.12 ॥ |
செயல்களின் பலனை விரும்புபவர்கள் இங்கே தேவதைகளை வழிபடுகின்றார்கள். ஏனெனில் பூமியில் செயல்களின் பலன் விரைவில் உண்டாகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காவது அத்தியாயம் (ஞான கர்ம சன்யாச யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, என்னை, கர்ம, பகவத்கீதை, சன்யாச, அத்தியாயம், நான், நான்காவது, ஸ்ரீமத், யோகம், யார், செயல்களின், அர்ஜுனா, gita, bhagavad, இந்து