பன்னிரண்டாவது அத்தியாயம் (பக்தி யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
மய்யேவ மந ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேஷய। நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்வம் ந ஸம்ஷய:॥ 12.8 ॥ |
என்னிடமே மனத்தை நிலைநிறுத்து, என்னிடம் புத்தியை செலுத்து,அப்போது என்னிடமே வசிப்பாய்.அதில் சந்தேகம் இல்லை.
அதசித்தம் ஸமாதாதும் ந ஷக்நோஷி மயி ஸ்திரம்। அப்யாஸயோகேந ததோ மாமிச்சாப்தும் தநம்ஜய॥ 12.9 ॥ |
அர்ஜுனா ! என்னிடம் மனத்தை உறுதியாக நிறுத்துவதற்கு முடியாவிட்டால் ஈடுபாட்டுடன் கூடிய இடைவிடாத பயிற்சியால் என்னை அடைய முயற்சி செய்.
அப்யாஸே அப்யஸமர்தோ அஸி மத்கர்மபரமோ பவ। மதர்தமபி கர்மாணி குர்வந்ஸித்திமவாப்ஸ்யஸி॥ 12.10 ॥ |
ஒழுங்காக பயிற்சியில் ஈடுபட முடியாவிட்டால் எனக்காக வேலை செய். எனக்காக வேலை செய்வதன் மூலம் நிறைநிலையை அடைவாய்.
அதைததப்யஷக்தோ அஸி கர்தும் மத்யோகமாஷ்ரித:। ஸர்வகர்மபலத்யாகம் தத: குரு யதாத்மவாந்॥ 12.11 ॥ |
இதை கூட செய்ய முடியாவிட்டால், பிறகு என்னில் இணைந்தவனாக, தஞ்சம் அடைந்தவனாக , சுயகட்டுப்பாட்டுடன் வேலை செய்து எல்லா வேலைகளின் பலன்களையும் துறந்துவிடு.
ஷ்ரேயோ ஹி ஜ்ஞாநமப்யாஸாஜ்ஜ்ஞாநாத்த்யாநம் விஷிஷ்யதே। த்யாநாத்கர்மபலத்யாகஸ்த்யாகாச்சாம்திரநந்தரம்॥ 12.12 ॥ |
பயிற்சியை விட அறிவு மேலானது. அறிவை விட ஆழ்ந்த சிந்தனை சிறந்தது. ஆழ்ந்த சிந்தனையை விட வேலைகளின் பலன்களை துறப்பது மேலானது. ஏனெனில் தியாகத்திலிருந்து விரைவில் அமைதி கிடைக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பன்னிரண்டாவது அத்தியாயம் (பக்தி யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, ஸ்ரீமத், பன்னிரண்டாவது, வேலை, அத்தியாயம், முடியாவிட்டால், பக்தி, யோகம், செய், எனக்காக, ஆழ்ந்த, மேலானது, வேலைகளின், மய்யேவ, gita, bhagavad, இந்து, என்னிடமே, மனத்தை, என்னிடம்