வேல் விருத்தம் - 3 - வேல் விருத்தம்
சாரங்கா - கண்ட சாபு
வேதாள பூதமொடு காளி காளத்ரிகளும் வெகுளுறு பசாச கணமும் வென் கழுகுடன் கொடி பருந்து செம் புவனத்தில் வெம்பசி ஒழிக்கவந்தே ஆதார கமடமுங்க் கணபண வியாளமும் அடக்கிய தடக் கிரியெலாம் அலைய நடமிடு நெடுன் தானவர் நிணத்தசை அருந்தி புரந்த வைவேல் தாதார் மலர்ச்சுவனி பழனிமலை சோலைமலை தனிப்பரங்க் குன்றேரகம் தணிகை செந்தூரிடைக் கழி ஆவினங்குடி தடங்க் கடல் இலங்கை அதனிற் போதார் பொழில் கதிர்க்காமத் தலத்தினை புகழும் அவரவர் நாவினிற் புந்தியில் அமர்ந்தவன் கந்தன் முருகன் குகன் புங்கவன் செங்கை வேலே (கந்தங்குகன் செங்கை வேலே முருகன் குகன் செங்கை வேலே) |
முருகனின் சேனைகளான வேதாள கணங்களும் பூத கணங்களும், நச்சுப் பற்களை உடைய கொடிய நாக சர்ப்பங்களும், பசியால் சினங் கொண்டிருக்கும், பிசாசு கூட்டங்களும், கொடிய பருந்துகள், காக்கைகள், பருந்துகள் (இவைகளுடன்), செழிப்பான இவ்வுலகத்தில், கொடிய பசியைத் தீர்க்கும்படி போர்க் களத்தில் எழுந்தருளி, உலகத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும் கூர்ம ராஜனும், கூட்டமான படங்களை உடைய ஆதிஷேசனும், தாங்கி இருக்கும், பரந்த மலைகளில் எல்லாம், அங்கும் இங்கும் நடந்துகொண்டு துன்பத்தை விளைவித்த, பெரிய வடிவுள்ள அரக்கர்களின், கொழுப்பையும் மாமிசத்தையும், உணவாகக் கொண்டு, உலகத்தை எல்லாம் காப்பாற்றி அருளிய, கூரிய வேல், (அது எது என வினவினால்) மகரந்தப் பொடிகள் நிறைந்துள்ள பூஞ்சோலைகள் அருவிகள் விளங்கும், பழநி மலை, பழமுதிர்ச்சோலை, ஒப்பற்ற திருப்பரங்குன்றம், சுவாமி மலை, திருச்செந்தூர், திருவிடைக்கழி, திருவாவினன் குடி, பெரிய கடல் சூழ்ந்த இலங்கைத் தீவில், மலர்கள் நிறைந்த பூங்காக்கள் உள்ள, கதிர்காமப் பதியை, விரும்பித்துதிக்கின்ற அடியார்களின், நாவிலும், சித்தத்திலும், வீற்றிருக்கும், கந்தக் கடவுள், முருகப் பெருமான், குகன், புனித மூர்த்தியின், அழகிய வேலாயுதமே அது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேல் விருத்தம் - 3 - வேல் விருத்தம், Vel Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - செங்கை, வேலே, கொடிய, குகன், கொண்டிருக்கும், பருந்துகள், பெரிய, எல்லாம், கணங்களும், கடல், முருகன், வேதாள, உடைய