19. மயில் வகுப்பு - திருவகுப்பு
(மயிலின் ஆற்றலைக் கூறுவது )
ஆதவனும் அம்புலியும் மாசுறவி ழுங்கியுமிழ் ஆலமரு வும்பணியி ரண்டும் அழுதே |
|
ஆறுமுகன் ஐந்துமுகன் ஆனைமுகன் எங்கடவு ளாமெனமொ ழிந்தகல வென்று விடுமே |
1 |
ஆர்கலிக டைந்தமுது வானவர்அ ருந்தஅருள் ஆதிபக வன்துயில்அ நந்தன் மணிசேர் |
|
ஆயிரம் இருந்தலைக ளாய்விரிப ணங்குருதி யாகமுழு துங்குலைய வந்த றையுமே |
2 |
வேதமுழு தும்புகல் இராமன் ஒரு தம்பிமிசை வீடணன் அருந்தமையன் மைந்தன் இகலாய் |
|
வீசும்அர வஞ்சிதறி யோடவரு வெங்கலுழன் மேல்இடி எனும்படிமு ழங்கி விழுமே |
3 |
மேதினிசு மந்தபெரு மாசுணம யங்கநக மேவுசர ணங்கொடுல கெங்கு முழுமெ |
4 |
வேலியென எண்டிசையில் வாழும்உர கந்தளர வேஅழலெ னுஞ்சினமு டன்ப டருமே |
5 |
போதினில் இருந்தகலை மாதினைம ணந்தவுயர் போதனை யிரந்துமலர் கொண்டு முறையே |
|
பூசனைபு ரிந்துகொடி யாகிமகிழ் ஒன்றுதுகிர் போல்முடிவி ளங்கவரும் அஞ்சம் அடுமே |
6 |
பூதரொடு கந்தருவர் நாதரொடு கிம்புருடர் பூரணக ணங்களொடு வந்து தொழவே |
|
போரிடுவ வென்றுவெகு வாரணக ணங்களுயிர் போயினம் எனும்படிஎ திர்ந்து விழுமே |
7 |
கோதகலும் ஐந்துமலர் வாளிமத னன்பொருவில் கோலவுட லங்கருகி வெந்து விழவே |
|
கோபமொடு கண்டவிழி நாதர் அணி யும்பணிகள் கூடிமனம் அஞ்சிவளை சென்று புகவே |
|
கூவியிர வந்தம்உணர் வாழியென நின்றுபொரு கோழியொடு வென்றிமுறை யும்ப கருமே |
8 |
கோலமுறு செந்தில்நகர் மேவுகும ரன்சரண கோகனதம் அன்பொடுவ ணங்கு மயிலே. |
9 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
19. மயில் வகுப்பு - திருவகுப்பு, Thiruvaguppu, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - விழுமே