சேவல் விருத்தம் - 4
மனோலயம் - ஆதி
அச்சப் படக் குரல் முழக்கிப் பகட்டி அல றிக் கொட்டமிட்ட் அமரிடும் அற்பக் குறப் பலிகள் வெட்டுக்கள் பட்டுகடி அறு குழைகளைக் கொத்தியே பிச்சு சினத்த் உதறி எட்டுத்திசைப் பலிகள் இட்டுக் கொதித்து விறலே பெற்றுச் சுடர் சிறகு தட்டிக் குதித்தியல் பெறக் கொக்கரித்து வருமாம் பொய் சித்திரப் பலவும் உட்கத் திரை ஜலதி பொற்றைக் கறுத் அயில்விடும் புட்தி ப்ரியத்தன் வெகு வித்தைக் குணக்கடல் புகழ் செட்டி சுப்ரமணியன் செச்சைப் புயத்தன் நவ ரத்ன க்ரிடத்தன் மொழி தித்திக்கு முத் தமிழினை தெரியவரு பொதிகைமலை முனிவர்க் குரைத்தவன் சேவற் திருத் துவஜமே (சேவற்திருத் துவஜமே சுப்ரமணியன் சேவற்திருத் துவஜமே) |
பகைவர்கள் அஞ்சும் படி, பெருத்த சப்தம் செய்து, விரட்டி, கூக்கரலிட்டு, ஆர்ப்பாட்டத்துடன், போர் செய்யும், அற்பமான சிறு தேவதைகளுக்கு படைத்திருக்கும், பலி வரிசைகளில், வெட்டுக்கள் பட்டு, அந்தச் சிறு தேவதைகள் கடித்துப் போட்டிருந்த, இலைகள் தழைகள் போன்றவைகளை, மூக்கால் கொத்தி, துண்டு துண்டாக பிய்த்தும், நான்கு பக்கமும் தூக்கி வீசி, எட்டு திசைகளிலும் அடைத்து பலி போடுவது போல் பெரும் கிளர்ச்சியுடன் வலிமை பெற்று, ஒளி வீசும் தனது சிறகுகளைத் தட்டிக் கொண்டு, மிகுந்த லட்சணத்துடன் கொக்கரித்துக் கொண்டு வரும் (அது எது என வினாவினால்) பொய்யும் கற்பனைகளும் நிறைந்த புறச் சமயங்கள், நடுங்கி பின் வாங்கவும், அலை வீசும் கடல் மீதும், அவைகள் கருகிக் போகும்படி, ஒளி வீசும் வேலாயுதத்தை செலுத்தியவன், அன்பும் அறிவும் நிறம்பப் பெற்றவன், சகல கலைகளிலும் கடலென திறமை மிக்கவன், புகழ் மிக்க செட்டியாகிய சுப்ரமணியக் கடவுள், வெட்சி மாலையை அணிந்தவன், நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட கிரீடத்தை அணிந்துள்ளவன், மொழிக்கு மொழி இனிமை மிக்க, இயல், இசை, நாடகம் என்கின்ற மூன்று தமிழையும், அறிந்து கொள்வதற்காக வந்த பொதிகை மலையில் வாழும் முனி சிரேஷ்டரான அகத்தியனுக்கு, உபதேசம் செய்தவருமாகிய குமாரக் கடவுளின், கொடியில் உள்ள சேவலே தான் அது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேவல் விருத்தம் - 4 - Seval Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வீசும், துவஜமே, சேவற்திருத், சிறு, கொண்டு, மிக்க, மொழி, வெட்டுக்கள், தட்டிக், புகழ், சுப்ரமணியன், பலிகள்