கேள்வி எண் 11 - சட்டக்கேள்விகள் 100
11. இஸ்லாம் சட்டத்தில், ஒரு பெண், தத்தெடுத்த மகனுக்கு தன் சொத்தை எழுதி வைக்கமுடியுமா?
வாரிசு இல்லாத பெண், தன் பெயரில் உள்ள சொத்து முழுவதையும், தான் தத்து எடுத்து வளர்த்த மகனுக்கு எழுதி வைக்க முடியுமா-? அவளது கூடப் பிறந்த சகோதரர்களுக்கும் அச்சொத்தில் பாகம் கிடைக்குமா? ஷரியத் சட்டம் என்ன சொல்கிறது? இஸ்லாத்தில் தத்தெடுத்து வளர்க்க அனுமதி உள்ளதா?
- I. ஜமாலுதீன், கிண்டி
பதில் :
தத்து எடுத்து வளர்ப்பதற்கு இஸ்லாத்தில் தடை ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதே சமயம், தத்தெடுத்து வளர்ப்பதால் மட்டுமே தந்தை, மகன் என்ற உறவோ, வாரிசுரிமையோ ஏற்பட்டு விடாது. நாம் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறோம் என்றால் அந்தக் குழந்தையின் தந்தை பெயருக்குப் பதிலாக நம்முடைய பெயரைப் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை.
வளர்ப்பு குழந்தைக்கு வாரிசுரிமை ஏற்படாது. எனினும் ஒருவர் விரும்பினால் தனது வளர்ப்பு மகனுக்கு மரண சாசனம் (உயில்) மூலம் சொத்தை எழுதி வைக்கமுடியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, எழுதி, தத்தெடுத்து, மகனுக்கு, தந்தை, வளர்ப்பு, இஸ்லாத்தில், தத்து, சொத்தை, பெண், எடுத்து