ஈரோடு - தமிழக மாவட்டங்கள்
தலைநகரம் : | ஈரோடு |
பரப்பு : | 5,760 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 2,251,744 (2011) |
எழுத்தறிவு : | 1,492,662 (72.58%) |
ஆண்கள் : | 1,129,868 |
பெண்கள் : | 1,121,876 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 391 |
பெயர்க் காரணம்:
பிச்சைக்காரன் ஓடை, பெருபள்ள ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் இவ்வூரை ஈரோடை (இரண்டு ஓடை) என்னும் பெயரால் அழைக்கின்றனர். இங்குள்ள கடவுளுக்கும் 'ஈரோடையப்பர்' என்ற பெயரே காணப்படுகிறது.
எல்லைகள்:
தெற்கில் திண்டுக்கல் மாவட்டமும், கிழக்கில் சேலம்-கரூர் மாவட்டங்களும், வடக்கில் கர்நாடகமும், மேற்கில் கோவை மாவட்டமும் ஈரோடு மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாற்றுச் சிறப்பு:
கோவை மாவட்டத்திலிருந்து 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ந் தேதி, ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது. பழங்கால கொங்கு மண்டலத்தில் மேல்கொங்கு மண்டலமாக ஈரோடு மாவட்டம் விளங்குகிறது. கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களையும், கரூர் மாவட்டத்தின் மேற்குப் பகுதியையும், திண்டுக்கல் மாவட்டத்தின் வடக்குப் பகுதியையும் உள்ளடக்கியிருப்பதே கொங்கு நாடு ஆகும். இப்பகுதிகளை கொங்கர் என்னும் ஆயர்கள் ஆண்டு வந்தனர். கொங்கரை வெற்றி கொண்டு சேர நாட்டுடன் பல்யானை செல்கெழு குட்டுவன் சேர்த்துக் கொண்டான் என்று பதிற்றுப்பத்து கூறுகிறது.இங்குள்ள தாராபுரத்தில் உரோம நாணயங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. உரோம பேரரசுக்கும் இம்மாவட்ட வணிகர்களுக்கும் வணிகம் நடந்திருக்க வேண்டும் என்பது வரலாற்றறிஞர்களின் கணிப்பு. இதுபோலவே நொய்யல் ஆற்றின் கரையில் சென்னி மலைக்கு அருகே உள்ள 'கொடுமணல் நாகரிகம்' 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு பல வண்ண மணிகள், ஓடுகள் கிடைத்துள்ளன. சங்க காலத்திற்கு பின்னர் கங்கர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். அவர்களை சோழர்கள் 9ஆம் நூற்றாண்டில் முறியடித்து கொங்கு மண்டலத்தை ஆளத் தலைப் பட்டனர். சோழர் ஆட்சியில் கொங்கு மண்டலத்தின் பெயர் 'அதிராசராச மண்டலம்' என்று அழைக்கப்பட்டது. இக்காலத்தில் கொங்குவேளிர் 'பெருங்கதை'யையும்; பவணந்தி 'நன்னுலையும்; அடியார்க்கு நல்லார் 'சிலப்பதிகாரத்'திற்கு உரையையும் எழுதியுள்ளனர். சோழர்களுக்கு பிறகு பாண்டியர்கள், ஹோய்சாளர்கள், விஜயநகர மன்னர்கள், மைசூர் உடையார்கள், திப்புசுல்தான் முதலியோர் இப்பகுதியை ஆண்டிருக்கின்றனர். இக்காலங்களில் பட்டக்காரர் வசம் வரிவசூலிப்பு இருந்திருக்கிறது.
சட்டசபை தொகுதிகள்:
11 - வெள்ளக்கோவில், காங்கேயம், மொடக்குறிச்சி, பெருந்துறை, ஈரோடு, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், பவானிசாகர், சத்தியமங்கலம், தாராபுரம்.
பாராளுமன்ற தொகுதி: -
1 கோபிசெட்டிப் பாளையம்
ஆறுகள்:
காவிரி, நொய்யல், பவானி, உப்பாறு.
அணைக்கட்டுகள்:
பவானி சாகர், வறட்டுப்பள்ளம், கொடிவேரி, ஒரத்துப்பள்ளம், உப்பாறு, காளிங்கரான் அணை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஈரோடு - Erode - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - ஈரோடு, கொங்கு, tamilnadu, மாவட்டங்கள், தமிழக, கோவை, மாவட்டத்தின், பவானி, தகவல்கள், தமிழ்நாட்டுத், ஆண்டு, | , மாவட்டம், உப்பாறு, பகுதியையும், நொய்யல், உரோம, திண்டுக்கல், information, districts, erode, மக்கள், இரண்டு, மாவட்டமும், இங்குள்ள, என்னும், கரூர்