மௌரியருக்குப் பிந்தைய கால இந்தியா
சாதவாகனர் ஆட்சிக் காலத்தில் வாணிகமும் தொழிலும் நன்கு வளர்ச்சியடைந்தன. வணிகர்கள் தங்களது வாணிபத்தைப் பெருக்குவதற்காக வணிகக் குழுக்களை அமைத்துக் கொண்டனர்.
குயவர்கள், நெசவுத் தொழில் செய்வோர், எண்ணெய் உற்பத்தியாளர்கள் போன்ற கைவினைஞர்களும் கழகங்களை ஏற்படுத்திக் கொண்டனர். கர்ஷபணம் என்று அழைக்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்பட்டன. சாதவாகனர்கள் காலத்தில் அயல்நாட்டு வர்த்தகமும் நன்கு செழித்தது. தக்காணத்திலிருந்த பல்வேறு துறைமுகங்களை டாலமி குறிப்பிட்டுள்ளார். மேற்கு தக்காணத்திலிருந்த கல்யாண், சாதவாகனர்களின் மிகப்பெரிய துறைமுகமாகும். கிழக்குக் கடற்கரையிலிருந்த கண்டகசேலா, கஞ்சம் என்ற துறைமுகங்களும் சிறப்பு வாய்ந்தவை.
பண்பாட்டுக் கொடை
சாதவாகனர்கள் பிராமண சமயத்தையும் புத்த சமயத்தையும் ஆதரித்தனர். சைத்தியங்களையும் விகாரங்களைபும் கட்டினர். புத்தசமய துறவிகளுக்கு நிலங்கள் மற்றும் கிராமங்களை மானியமாக வழங்கினர். வசிஷ்டபுத்ர புலமாயி என்ற அரசர் அமராவதி ஸ்தூபியை செப்பனிட்டார். நாகார்ஜினகொண்டாவிலுள்ள அவர்களது கட்டிடக்கலை குறிப்பிடத்தக்கது. பிராமண சமயத்தை மீண்டும் உயிர்ப்பித்த சாதவாகனர்கள் அசுவமேதம் மற்றும் ராஜசூய வேள்விகளையும் நடத்தினர். பிராகிருத மொழி மற்றும் இலக்கியத்தையும் அவர்கள் ஆதரித்தனர். ஹாலா எழுதிய சத்தசாய் பிராகிருத இலக்கியத்தின் போற்றத்தக்க நூலாக விளங்குகிறது.
வடமேற்கு இந்தியாவில் அயலவர் படையெடுப்புகள்
பாக்டிரியர்கள்
கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பாக்டிரியா, பார்த்தியா இரண்டும் சிரியாப் பேரரசிலிருந்து விடுதலை பெற்றன. பாக்டிரியாவின் கிரேக்க ஆட்சியாளரான டெமெட்ரியஸ் ஆப்கானிஸ்தான், பஞ்சாப் பகுதிகளைத் தாக்கி கைப்பற்றினார். தட்சசீலத்திளிருந்து அப்போலோடோடஸ், மீனாந்தர் என்ற தமது இரண்டு படைத்தலைவர்களை மற்ற பகுதிகளைப் கைப்பற்றும்படி அனுப்பி வைத்தார். அப்போலோடோடஸ் சிந்துப் பகுதியைக் கைப்பற்றி உஜ்ஜயினிவரை முன்னேறினார். மீனாந்தர் மதுரா வரை தமது ஆட்சியை விரிவுபடுத்தியதுடன் பாடலிபுத்திரத்தைக் கைப்பற்றவும் முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், புஷ்பமித்ர கங்கனின் பேரனான வசுமித்ரன் அவனை எதிர்த்துப் போரிட்டு தடுத்து நிறுத்தினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மௌரியருக்குப் பிந்தைய கால இந்தியா , வரலாறு, இந்தியா, இந்திய, மௌரியருக்குப், சாதவாகனர்கள், பிந்தைய, அப்போலோடோடஸ், பிராகிருத, மீனாந்தர், தமது, ஆதரித்தனர், பிராமண, நன்கு, கொண்டனர், தக்காணத்திலிருந்த, காலத்தில், சமயத்தையும்