பதினாறு மகாஜனபதங்கள்
கோசல நாட்டின் தலைநகரம் அயோத்தி இதன் புகழ்வாய்ந்த அரசர் பிரசேனஜித். கல்வியில் சிறந்தவர். மகதத்தோடு மணவுறவு கொண்டபின் அவரது செல்வாக்கு மேலும் அதிகரித்தது. தனது தமக்கையை பிம்பிசாரனுக்கு மணமுடித்து காசியை மணப் பரிசாகவும் கொடுத்தார். பின்னர் அஜாதசத்ருவுடன் மோதல் ஏற்பட்டது. இறுதியில் பிரசேனஜித், பிம்பிசாரனின் மகளை மணம்புரிந்து கொண்டார். அவரது மறைவுக்குப்பின் கோசலம் மகதத்தின் ஒருபகுதியாயிற்று.
மகதம்
வடஇந்திய அரசுகளிலேயே, மகதம் வலிமையாகவும் வளமையாகவும் எழுச்சி பெற்றது. வடஇந்திய அரசியல் நடவடிக்கைகளின் மையமாக அது திகழ்ந்தது. மகதத்தின் புவியியல் அமைப்பு மற்றும் ராணுவ முக்கியத்துவம் பெற்ற அமைவிடம் இயற்கை மகதத்திற்கு அளித்த கொடை எனலாம். கங்கைச் சமவெளியின் இடைப்பட்ட பகுதியில் மகதம் அமைந்திருந்தது சாதகமாகவே காணப்பட்டது. வளமான விளைநிலங்கள் ராஜ்கீருக்கருகில் இருந்த இரும்புக் கனிவளம், கயாவுக்கு அருகிலிருந்த இரும்புப் படிமங்கள் ஆகியன இயற்கை அளித்த வரமாகும். அக்காலத்தில் வாணிக வழித்தடத்தின் மையத்திலும் மகதம் அமைந்திருந்தது குறிப்பிடத் தக்கதாகும். மகதத்தின் தலைநகரம் ராஐகிருஹம், பிம்பிசாரன், அஜாதசத்ரு ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் மகதத்தின் செல்வம் அதன் உச்சஅளவை எட்டியது.
பிம்பிசாரர் (கி.மு. 546 - கி.மு. 494)
புத்தருடன் பிம்பிசாரர் |
வர்த்தமான மகாவீரர், கௌதம புத்தர் ஆகிய இருவருக்கும் பிம்பிசாரர் சமகாலத்தவர். இருப்பினும், இவ்விரு சமயங்களும் பிம்பிசாரரை தத்தம் ஆதரவாளர் என்று கோருகின்றன. புத்த சங்கத்திற்கு எண்ணற்ற பரிசுகளை அவர் வழங்கியதாகத் தெரிகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினாறு மகாஜனபதங்கள் , வரலாறு, கொண்டார், மகதத்தின், மகதம், தனது, பிம்பிசாரர், அவர், இந்திய, மேலும், பதினாறு, பிம்பிசாரன், மகாஜனபதங்கள், அளித்த, மணந்து, குடும்பத்தைச், இயற்கை, அமைந்திருந்தது, பின்னர், கோசலம், இந்தியா, கோசல, தலைநகரம், அவரது, பிரசேனஜித், வடஇந்திய