கிரேக்கப் படையெடுப்புகள்
அலெக்சாண்டர் படையெடுப்பின் விளைவுகள்
மௌரியர்களின் கீழ் வடஇந்தியாவில் அரசியல் ஒருமைப்பாடு ஏற்பட்டதே அலெக்சாண்டர் படையெடுப்பின் உடனடி விளைவாகும். சிறு அரசுகள் என்ற முறை முடிவுக்கு வந்தது. இந்தியா, கிரேக்கம் ஆகியவற்றுக்கிடையே நேரடித் தொடர்பு ஏற்படுவதற்கு அலெக்சாண்டர் படையெடுப்பு வழிவகுத்தது. அவர் ஏற்படுத்திய புதிய வழிகள், கடல் ஆய்வுகள் போன்றவற்றால் இந்தியாவிற்கும் மேற்கு ஆசியாவிற்கும் இடையே நிலவி வந்த வர்த்தகத் தொடர்புகள் மேலும் பெருகின. அவரது அகால மரணத்தினால், வடமேற்கு இந்தியாவை தனது பேரரசுடன் இணைத்துக் கொள்ளவேண்டும் என்ற அவரது விருப்பம் நிறைவேறாமல் போயிற்று. சந்திரகுப்தரின் கீழ் மௌரியப் பேரரசு விரிவடைந்தமையால் சிந்துவெளியில் அவர் ஏற்படுத்திய ஆதிக்கம் சொற்பகாலமே நீடித்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கிரேக்கப் படையெடுப்புகள் , வரலாறு, அவரது, அலெக்சாண்டர், தாயகம், இந்திய, கிரேக்கப், அவர், படையெடுப்புகள், இந்தியா, படைகள், படையெடுப்பின், ஏற்படுத்திய, சிந்து, கீழ், மேலும், சிறு, தனது, பியாஸ், செய்தார், பகுதிகளை