நீதிக்கட்சியின் ஆட்சி
தொழிற்சாலையின் வளர்ச்சிக்காக 1922ம் ஆண்டு சென்னை அரசாங்க தொழிற்சாலைகள் உதவிச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இது பல புதிய தொழிற்சாலைகள் உருவாக காரணமாயின. உதாரணமாக சர்க்கரை தொழிற்சாலைகள், பொறியாளர் பணிகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள், அலுமினியம், சிமெணட் தொழிற்சாலைகள், எண்ணெய் தொழிற்சாலைகள் உருவாயின . இந்த உதவிச்சட்டம் தொழிற்சாலைகளுக்கு நிலம், நீர்பாசன வசதிகள் வழங்க வழிவகை செய்தது.
அதுபோலலே நீதிக்கட்சி கிராமப்புற வளர்ச்சிக்காகவும், வேளாண் மக்களுக்கு உதவிட திட்டங்களை அறிமுகப்படுத்தியது. நோய்களை தடுக்க பொது சுகாதாரத் திட்டங்களை கொண்டு வந்தது. கிராமப்புற சாலைகளை மேம்படுத்த திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சென்னையில் நகர மேம்பாட்டு குழுவாயிலாக சென்னை மாநகராட்சி குடிசைகளை மாற்றி வீடு கட்டும் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. சமுதாய நல நடவடிக்கைகளாக நீதிக்கட்சி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தரிசு நிலங்களை வழங்கியது. பெண்களை இழிவுபடுத்தும் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் செயல்முறைகள் சீரமைக்கப்பட்டன. நீதிக் கட்சி ஆட்சியின்போதுதான் 1926ல் ஆந்திரப் பல்கலைக்கழகமும், 1929ல் அண்ணாமலை பல்கலைக்கழகமும் நிறுவப்பட்டன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நீதிக்கட்சியின் ஆட்சி , வரலாறு, தொழிற்சாலைகள், இந்திய, நீதிக்கட்சியின், நீதிக்கட்சி, அறிமுகப்படுத்தியது, திட்டங்களை, ஆட்சி, ஆண்டு, கிராமப்புற, பல்கலைக்கழகமும், கொண்டு, மக்களுக்கு, 1929ல், பனகல், இந்தியா, அமைச்சரவையால், பணியாளர், சட்டம், சென்னை