ஐரோப்பியர் வருகை
1664 ஆம் ஆண்டு பதினான்காம் லூயி மன்னரின் அமைச்சரான கால்பர்ட் என்பவரால் பிரஞ்சு கிழக்கிந்திய வணிகக் குழு ஏற்படுத்தப்பட்டது. சிரான்சிஸ் கேரன் என்பவரால் சூரத் நகரில் முதலாவது பிரஞ்சு வணிக நிலையம் நிறுவப்பட்டது. பின்னர் மெர்க்காரா என்பவரால் மசூலிப்பட்டினத்தில் ஒரு வணிக நிலையம் அமைக்கப்பட்டது. பிராங்காய் மார்ட்டின் 1673ல் பாண்டிச்சேரியை நிறுவினார். சந்திர நாகூர், மாஹி, காரைக்கால் போன்றவை இந்தியாவில் நிறுவப்பட்ட மற்ற பிரஞ்சு வணிக நிலையங்களாகும். பிராங்காய் மார்ட்டின் பாண்டிச்சேரியின் முதலாவது ஆளுநராவார். இந்தியாவில் பிரஞ்சுக் குடியேற்றங்களுக்கு தலைமையிடமாக பாண்டிச்சேரி திகழ்ந்தது.
டேனியர்கள்
இந்தியாவில் டென்மார்க் நாடும் வணிக நிலையங்களை நிறுவியது. 1620ல் தரங்கம்பாடியில் டேனிஷ் வணிக நிலையம் ஏற்படுத்தப்பட்டது. மற்றொரு முக்கிய டேனிஷ் குடியிருப்பு வங்காளத்திலிருந்த சீராம்பூர். சீராம்பூர் இந்தியாவில் அவர்களது தலைமையிடமாகும். இந்தியாவில் அவர்கள் தங்களது நிலையை வலுப்படுத்தவில்லை. 1845ல் தங்களது இந்தியக் குடியேற்றங்களை பிரிட்டிஷாருக்கு விற்றுவிட்டனர்.
ஆங்கிலேய - பிரஞ்சு ஆதிக்கப் போட்டி
இந்தியாவில் தங்களது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக ஆங்கிலேயரும் பிரஞ்சுக்காரரும் பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து போட்டியிடத் தொடங்கினர்.
இந்தியாவில் முகலாயப் பேரரசு வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து நிலவிய அரசியல் குழப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அவர்கள் இந்திய உள்நாட்டு அரசியலில் தலையிட்டனர். கர்நாடகப் பகுதியிலும் வங்காளத்திலும் ஆங்கிலேய - பிரஞ்சு ஆதிக்கப் போட்டி நன்கு வெளிப்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐரோப்பியர் வருகை , இந்தியாவில், வரலாறு, பிரஞ்சு, இந்திய, வணிக, ஐரோப்பியர், தங்களது, நிலையம், வருகை, ஆங்கிலேய, ஆதிக்கப், போட்டி, சீராம்பூர், டேனிஷ், ஏற்படுத்தப்பட்டது, பிராங்காய், மார்ட்டின், இந்தியா, முதலாவது