');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
முகமது காவனின் சீர்திருத்தங்களும் சிறப்பானவை. உயர் குடியினர் மற்றும் மாகாணங்களை கட்டுப்படுத்துவதே அவரது குறிக்கோளாகும். இதற்காக ஒவ்வொரு மாகாணத்திலும் அரச அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். பெரும்பாலான கோட்டைகள் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தன. கடமைதவறும் உயர்குடியினருக்கு சலுகைகள் குறைக்கப்பட்டன. எனவே காவனுக்கு எதிராக தக்கணி உயர்குடியினர் சதித்திட்டம் ஒன்றைத் தீட்டினர். அதன்படி சுல்தானைத் தூண்டிவிட்டு காவனுக்கு தூக்குதண்டனை வாங்கிக்கொடுத்தனர். முகமது காவனின் மறைவுக்குப்பிறகு பாமினி அரசு வீழ்ச்சியடையத்தொடங்கியது. முகமதுஷாவுக்குப் பிறகு திறமையற்ற சுல்தான்கள் ஆட்சிக்கு வந்தனர்.
இக்காலத்தில் மாகாண ஆளுநர்கள் தங்களது சுதந்தித்தை அறிவித்துக் கொண்டனர். 1526 ஆம் ஆண்டு வாக்கில் பாமினி அரசு ஐந்து சுதந்திர சுல்தானியங்களாக சிதறுண்டன. அகமது நகர், பீஜப்பூர், பீரார், கோல்கொண்டா, பீடார் என்ற ஐந்தும் தக்கான சுல்தானியங்கள் என்று அழைக்கப்பட்டன.
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->