வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 42
“அப்படியானால் என்ன செய்வீர்கள்?”
“இந்த வால்கா நதிப் பிரதேசத்தை விட்டு விட்டுப் போய்விடுவோம். துருவ! இந்த நதி நமக்கு எவ்வளவு பிரியமானது! நான் இனிமேல் இதைப் பார்க்க முடியாது. இதனாலே இன்று நான் ஆசைதீரப் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.”
“இனிமேல் இந்த நதியை நீ பார்க்கவே முடியாதா?”
“ முடியாது. எப்படி முடியும்? இதில் நீந்தவும் முடியாது, இதில் நீந்துவது ஆனந்தமாயிருக்கும்!”
ஒரு பெருமூச்சு விட்டாள். துக்கத்தால் அவளுடைய தொண்டை தளுதளுத்தது. துருவனுடைய முகமும் துக்கத்தால் சுருங்கியது. கோபத்தால் அவளுடைய உதடுகள் துடிக்க ஆரம்பித்தன. “கொடுமை; பெரிய அநீதி இந்த யுத்தம்” என்றது அவன் வாய்.
“ஆனால் துருவ! இது சமூக தர்மம்.”
சமூக தர்மமா? இல்லை? இல்லை; இது மிருக தர்மம்.”
__________________________________________________
* இன்றைக்கு இருநூற்று இருபத்தைந்து தலைமுறைகளுக்கு முந்திய கதை இது. அந்தக் காலத்தில் இந்திய, ஈரான், வெள்ளை ருஷ்யா முதலிய பிரதேசங்களைச் சேர்ந்த ஒரு கலப்பு ஜாதியார் இருந்தனர். இவர்களை இந்தோ-ஸ்லாவியர் அல்லது ஷந்த் வம்சத்தினர் என்று சொல்வார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 42, புத்தகங்கள், வால்காவிலிருந்து, பக்கம், கங்கை, முடியாது, சமூக, அவளுடைய, இல்லை, தர்மம், நான், சிறந்த, துருவ, இதில், துக்கத்தால்