வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 353
சுமேர்
காலம் : கி.பி. 1942
1941ம் வருடம் ஆகஸ்டு மாதம். இவ்வருடம் மழை மிக அதிகமாகப் பெய்கிறது. எத்தனையோ முறை பல நாட்கள் தொடர்ந்து சூரியனையே பார்க்க முடியாமல் இருந்தது. பாட்னாவில், கங்கைப் பெருக்கு மிகுதும் அதிகரித்துவிட்டது. எந்த நிமிஷமும் கரையை உடைத்துக்கொண்டு வெள்ளம் நகருக்குள் வந்துவிடலாம் என்ற பயமும் இருந்தது. அந்த மாதிரிச் சந்தர்ப்பங்களிலே கண்காணிப்பு ரொம்ப அவசியம். பாட்னா நகரின் வாலிபர்களும் ஏராளமான மாணவர்களும் அணையில், காவல் காக்கும் வேலையை ஏற்றுக்கொண்டார்கள். சுமேர், பாட்னா கலாசாலையின் எம்.ஏ.
முதலாவது வருட மாணவன். திகா காட்டிற்குப் பக்கத்தில் அவனுக்கு டூட்டி போடப்பட்டிருந்தது. அன்று நள்ளிரவிலிருந்து, வெள்ளப்பெருக்கு இன்னும் அதிகரிக்கத் தொடங்கிற்று. காலை வரை பெருகுவதும் குறையவில்லை. அணையின் உயரம் தண்ணீரை விட ஓர் இஞ்சுதான் அதிகம் இருந்தது. கரைக்குப் பக்கத்தில் ஜனங்கள் மண்வெட்டியும் கூடையும் வைத்துக்கொண்டு தயாராயிருந்தார்கள்; அவர்கள் எவ்வளவு சுறுசுறுப்பாய் வேலை செய்தாலும் அந்தப் பக்கா அணைக்கட்டிற்கு மேல் ஓர் இஞ்சாவது உயர்த்தமுடியுமா என்பது சந்தேகமே. காலையிலிருந்து மிக்கக் கவலையோடு அணைக்கட்டின் மேல் உலவிக்கொண்டிருந்தான் சுமேர். பகலில் தண்ணீர் வடியத் தொடங்கியதும், அவனுடைய மனம் சிறிது நிம்மதியடைந்தது. அவனுக்குப் பக்கத்துப்பகுதியில் ஒரு கனவான் டூட்டியிலிருப்பதை அவன் பார்த்தான். அவரோடு பேச வேண்டுமென்று எத்தனையோ முறை அவன் ஆசைப்பட்டும், வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட அவன் கவலை, அவனை வாய் திறக்க முடியாமல் செய்துவிட்டது. இன்று வெள்ளம் வடியத் தொடங்கியதோடு, ஆகாயமும் வெளி வாங்கிவிட்டதால் சுமேர் மன நிம்மதியோடு தனக்குப் பக்கத்திலே டூட்டியிலிருப்பவருடன் பேச விரும்பினான்.
இருவரில் ஒருவர் நிறம் சிவப்பு, மற்றவர் கருப்பு. இருவரும் நடுத்தர உயரம். வயதிலோ சுமேர் இருபத்தொரு வயதுள்ள புஷ்டியான வாலிபன். மற்றவரோ நாற்பது வயது நிறைந்து கொஞ்சம் தடித்த உருவமுள்ளவராகக் காணப்பட்டார். சுமேர் காக்கி அரைக்கை சட்டையும் பாதங்களிலே ரப்பர்
பூட்ஸு ம் அணிந்து, தோளிலே ஒரு மழைக் கோட்டையும் தொங்கவிட்டுக்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 353, சுமேர், புத்தகங்கள், பக்கம், கங்கை, வால்காவிலிருந்து, அவன், உயரம், மேல், பக்கத்தில், வடியத், முறை, சிறந்த, எத்தனையோ, முடியாமல், வெள்ளம், பாட்னா