வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 27
திவா
தேசம் : வால்கா நதிக்கரை மத்திய பாகம்
ஜாதி : ஹிந்தோ- ஸ்லாவியா
காலம் : கி.மு. 3500
“திவா! வெயில் ரொம்ப அதிகம். உன்னுடைய உடம்பைப் பாரேன். எவ்வளவு வியர்வை. வா இங்கே வா, இந்தப் பாறை மீது உட்காருவோம்.”
“நல்லது, சூரஷ்வா! இதோ வந்துவிட்டேன்” என்று கூறிய திவா சூரஷ்வாவோடு ஒரு பெரிய தேவதாருவின் நிழலிலே அகலமான கல்லின் மீது
உட்கார்ந்தாள்.
நல்ல வெயில் காலம்; அதுவும் மத்தியான வேளை; தலை வெடிக்கும் இந்த வெயிலில் மிருகங்களின் பின்னே ஓடிவந்த திவாவின் நெற்றியில் கூட வியர்வையைக் காணோமே! சிரமத்தின் அறிகுறியாக அவளுடைய முகத்தில் முத்துப் போன்ற வியர்வைத் துளிகள் தோன்றாமலில்லை. ஆனால் சிரமங்கள் தீர்வதற்கு இங்கு வெகுநேரம் செல்லாது. இது அப்படிப்பட்ட பிரதேசம். அடிவாரத்திலிருந்து உச்சிவரை மலைகள் பசுமையாய் அலங்கரித்து நிற்கின்றன. வானளாவி நிற்கும் தேவதாரு மரங்கள் தனது அடர்ந்த கிளைகளாலும் கூர்மை பொருந்தி நெருக்கமாயுள்ள இலைகளாலும் சூரிய கிரணங்கள் பூமியில் படாதவாறு தடுத்து நிற்கின்றன. பூமியின் நடுநடுவே புதர்களும் பலவித செடிகொடிகளும், முளைத்தும் படர்ந்தும் கிடக்கின்றன. அங்கு உட்கார்ந்த சிறிது நேரத்திலே, அந்த மனித ஜோடி-நங்கையும் நம்பியும் தங்கள் சிரமத்தையே மறந்துவிட்டார்கள். அவர்களைச் சுற்றிச் செடிகள் தோறும் மலர்ந்திருக்கும் வண்ணமலர்களும், அவற்றின் நறுமணமும், அவர்களுடைய மனத்தைக் கவர்ந்துவிட்டன. பார்வையைக் கொஞ்சம் தூரத்தே செலுத்திய யுவன், தன்னுடைய வில் அம்பு முதலிய ஆயுதங்களைக் கல்லின் மீது வைத்துவிட்டுச் சலசலவெனச் சப்தமிட்டு ஓடிக்கொண்டிருந்த நதிக்கரையிலே மண்டிக் கிடந்த பல நிறமலர்க்கூட்டங்களை நோக்கி நடந்தான். விதவிதமாக வாசனை வீசும் அம்மலர்களை ஒவ்வொன்றாகப் பறிக்கத் தொடங்கினான். யுவதியும் தனது ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டு தன்னுடைய நீண்ட
அழகிய கூந்தலைத் தடவினாள். அதன் ஈரம் இன்னும் உலரவில்லை. அப்பொழுது மரக்கிளைகளிலும், புதர்களிலுமிருந்து எழும் பறவைகளின் இனிய ஓசை, அவளது இதயத்தைக் கவர்ந்ததோடு மட்டுமில்லை, கிளறியும் விட்டது. அதோ, மலர் கொய்து
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 27, புத்தகங்கள், வால்காவிலிருந்து, பக்கம், மீது, கங்கை, தனது, நிற்கின்றன, ஆயுதங்களைக், தன்னுடைய, காலம், சிறந்த, திவா, வெயில், கல்லின்