வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 263
பாபா நூர்தீன்
காலம் : கி.பி. 1300
“நாம் பாரத தேசத்தை ஒரு கறவைப் பசுவாகக் கருதி, அதன் விவசாயி, தொழிலாளி, வியாபாரி, அரசர்கள் முதலியவர்களிடமிருந்து முடிந்த அளவு அதிகமாகக் கறந்து கோர் தேசத்திற்கு அனுப்பவோ அல்லது நம்மிஷ்டம் போல் செலவழிக்கவோ செய்த அந்தக் காலம் மலையேறிவிட்டது. இப்பொழுது நாம் கோரின் அடிமைகளல்ல. பாரத நாட்டின் சுதந்திர அரசர்கள். “ஓர் ஒல்லியான வாலிபன் தனது கரிய தாடிக்கு மேலே உள்ள மெல்லிய ரேகை போன்ற மீசையை விரலால் தடவிக் கொண்டே சொன்னான்.
அவன் எதிரே பெரிய தலைப்பாகையும் நீண்ட வெள்ளை அங்கியும் தரித்த ஒரு வயோதிகர் அமர்ந்திருந்தார். அவருடைய வெண்மையான தாடி நீண்டு வளர்ந்து வயிறு வரை தொங்கிக் கொண்டிருந்தது. அவரது முகத்திலே, சாந்தமும் அறிவும் பிரகாசித்துக் கொண்டிருந்தன.
“ஆனால், அரசே! கிராமத் தலைவர்கள், பட்டேல்கள், தாசில்தார்கள் இவர்களை எடுத்துவிட்டால் இவர்கள் கலகம் செய்யத் தொடங்கிவிடுவார்கள். நாம் ஒவ்வொரு கிராமத்திற்கும், வரி வசூல் செய்வதற்காக நமது ராணுவத்தை அனுப்ப முடியாது.” என்றார் பெரியவர்.
“முதலில் நீங்கள் பாரத வாசியாகி, பாரதத்தில் அரசனாக இருக்க வேண்டுமா? அல்லது ரத்தினங்களையும் முத்துக்களையும் ஒட்டகங்களின் மீதும், கழுதைகளின் மீதும் ஏற்றிக் கொண்டு செல்லும் கோர் தேசத்துக் கஜினிக் கொள்ளைக்காரனாகவே இருக்க வேண்டுமா என்பதை நிச்சயித்துவிட வேண்டும்.”
“இப்பொழுது நாம் பாரதவாசிகளாகவேதான் ஆகி விட வேண்டும், ஜஹாம்பனாக்.”
“ஆம்; அடிமை அரசர்களைப் போல நமது அஸ்திவாரம் கோரிலே இல்லை; டெல்லியில்தான் இருக்கிறது. ஏதாவது கலகமோ, குழப்பமோ ஏற்பட்டால், நமக்கு அரேபியாவிலிருந்தோ, ஆப்கானிஸ்தானத்திலிருந்தோ உதவிப்படை வராது. நாம் இங்கிருந்து தப்பியோடி, அங்கே போய்த் தங்கவும்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 263, புத்தகங்கள், நாம், பக்கம், பாரத, வால்காவிலிருந்து, கங்கை, வேண்டுமா, இருக்க, மீதும், வேண்டும், நமது, அரசர்கள், சிறந்த, காலம், கோர், அல்லது