வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 140
பந்துல மல்லன்
காலம் : கி.மு. 490
வசந்தத்தின் ஆரம்ப காலம், விருட்சங்கள் யாவும் புதிய இலைகளால் அலங்கரித்துக் கொண்டிருந்தன. கடம்ப மரத்தின் புஷ்பங்கள் அவ்வனத்தில் நறுமணத்தைப் பரப்பிக் கொண்டிருந்தன. சூரியனுடைய பிரகாசம் பொருந்திய கிரணங்கள் இங்கு நுழைவதற்கு இன்னும் வெகு நேரம் ஆகும். காய்ந்து போன இலைகளின் சருகுகள் தரையை மூடிக் கிடந்தன. அடர்ந்த இக்கானகத்தினுடே, அச்சருகுகளின் மீது நடந்து செல்லும் மக்களது அடிச்சுவடுகளின் சப்தம் நமக்குக் கேட்டுக்கொண்டேயிருக்கும். ஒரு பெரிய புற்றுக்குச் சமீபம் நின்ற இருயௌவன உருவங்கள். ஆம், யுவனும், யுவதியும் அதைக் கூர்ந்து நோக்கிக்
கொண்டிருந்தனர். யுவதியின் சிவந்த வதனத்தில் இளமை நர்த்தனம் புரிந்தது. அந்த முகாரவிந்தத்தின் மீது இங்குமங்கும் பரவி விரிந்து கிடந்த நெடிய கருங்கூந்தல், அவளது செம்மேனியின் சௌந்தர்யத்தை எடுத்துக் காண்பிப்பது போலிருந்தது. வாலிபன் தன்னுடைய திரண்ட கரத்தை அவளது தோளில் வைத்துக் கொண்டு,
“மல்லிகா! இந்தப் புற்றைப் பார்ப்பதிலேயே ஏன் இவ்வளவு லயித்துப் போயிருக்கிறாய்?”
“இது எவ்வளவு பெரியதாயிருக்கிறது பார்த்தாயா?”
“ஆம்; மல்லிகா! சாதாரண புற்றுக்களைப் பார்க்கிலும் இது பெரியதுதான். ஆனால் இதைப் பார்க்கிலும் பெரிய பெரிய புற்றுக்களும் இருக்கின்றன. மழை வருஷித்ததும் இதிலிருந்து புகையும் நெருப்பும் உண்டாகும் என்று நீ நினைக்கவும் கூடும்.”
“இல்லை. அது ஒரு பொய்க்கதை என்பது எனக்குத் தெரியும் பந்துல்! எறும்புகளைப் போன்ற சின்னஞ்சிறிய இந்த ஜந்துக்களைப் பாரேன்! ரத்தம் போல சிவந்த முகம்; வெண்மையான நிறம். சிறிய உருவமுள்ள இவைகள் இவ்வளவு பெரிய புற்றைக் கட்டியிருக்கின்றன.”
“மனிதன் கட்டும் வீட்டையும் அவனது சரீரத்தைக் கொண்டு அளந்தால் அவனைப் பார்க்கிலும் எத்தனையோ மடங்கு பெரியதாயிருக்குமல்லவா? மல்லிகா! ஒரு கரையானுடைய வேலையில்லை இது; எத்தனையோ கரையான்கள் ஒன்று சேர்ந்து செய்த வேலையின் பரிணாமமே இந்தப் புற்று.
இதைப் போலவே மனிதர்களும் கூட்டாகச் சேர்ந்து தங்கள் காரியங்களைச்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 140, புத்தகங்கள், பெரிய, பார்க்கிலும், கங்கை, வால்காவிலிருந்து, பக்கம், இவ்வளவு, மல்லிகா, எத்தனையோ, சேர்ந்து, இந்தப், இதைப், சிவந்த, காலம், சிறந்த, கொண்டிருந்தன, மீது, அவளது, கொண்டு