வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 124
பிரவாஹன்
இடம் : பாஞ்சாலம் (ஐக்கிய மாகாணம்)
காலம் : கி.மு. 700
“ஒருபுறம் பசுமை நிறைந்த வனம். அங்கே கொத்துக் கொத்தாகத் தொங்கிக் கொண்டிருக்கும் சுவை மிகுந்த கனிகள்; அவைகளைத் தின்று சுதந்திரமாகப் பறந்து திரியும் பட்சிகளின் இனிய ஒலிகள். மறுபுறத்திலே தெள்ளிய நீர் பெருக்கெடுத்தோடும் புனித கங்கை. அதன் கரையிலே சுகமாக மேய்ந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான நமது பசுக்கள்; அவற்றின் மத்தியிலே கம்பீரமான குரல் எழுப்பிக் களித்துத் திரியும் கொழுத்த காளைகள்! இந்த அழகிய காட்சி நமது கண்களுக்குப் பெருவிருந்து. பார்க்கப் பார்க்கத்
தெவிட்டாத இந்த இயற்கை அழகிலே மனம் லயிக்க வேண்டும் பிரவாஹன்! நீயோ இதன் மத்தியிலும் சாம வேத கீதங்களை இசைத்துக் கொண்டும், வசிட்டர், விசுவாமித்திரர் முதலிய மகரிஷிகளின் மந்திரங்களை உருப்போட்டுக் கொண்டும் இருப்பதிலேயே உன் காலத்தைச் செலவிடுகிறாய்.”
“உன்னுடைய கண்கள் அந்தக் காட்சிகளிலே லயித்திருக்கின்றன. நானோ உன் கண்களைப் பார்ப்பதிலேயே திருப்தியடைகிறேன் லோபா!”
“உம். உனக்கு அழகாகவும் பேசத் தெரிந்திருக்கிறதே! உன்னுடைய சக மாணவர்களோடு நீ உட்கார்ந்து கொண்டு நாய் குரைப்பது போல பழைய வேத மந்திரங்களை உருப்போட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கும் பொழுதெல்லாம், பாவம், நீ ஆயுள் முழுவதும் பால் குடிக்கும் குழந்தையைப் போலவே இருந்து விடுவாய் என்று எனக்குத் தோன்றும்.”
“லோபா! பிரவாஹனைப் பற்றி உண்மையிலே உன்னுடைய அபிப்பிராயம் இதுதானா?”
“அபிப்ராயம் எதுவாகவும் இருக்கட்டும். ஆனால் பிரவாஹன் எப்பொழுதும் எனக்கே சொந்தம் என்பது உறுதி.”
“இந்த ஆசையும் நம்பிக்கையும்தான், கஷ்டப்பட்டுக் கல்வியைச் சேகரிப்பதற்கு எனக்குச் சக்தியை அளித்து வந்திருக்கிறது; எனக்கு மனதைக் கட்டுப்படுத்தும் சக்தி பூரணமாக இருக்கிறது. இல்லாவிடில் இந்தப் பழங்கதைகளையும், பழைய மந்திரங்களையும், ராக ஆலாபனையையும் திரும்பத் திரும்ப உருப்போடுவதை விடுத்து நான் ஓடிப்போய் எவ்வளவோ
காலமாயிருக்கும். உழைத்து உழைத்துக் களைத்துப் போகும்போதும், இந்தக்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 124, புத்தகங்கள், கங்கை, வால்காவிலிருந்து, பக்கம், பிரவாஹன், உருப்போட்டுக், உன்னுடைய, மந்திரங்களை, பழைய, கொண்டிருக்கும், சிறந்த, திரியும், நமது, கொண்டும்