சத்ய சோதனை - பக்கம் 40
மனுஸ்மிருதி, அக்காலத்தில் அகிம்சா தருமத்தை எனக்குப் போதிக்கவில்லை என்பது மாத்திரம் உண்மை. நான் புலால் உண்ட கதையைக் கூறியிருக்கிறேன். அதை மனுஸ்மிருதி ஆதரிப்பதாகத் தோன்றியது. பாம்புகள், மூட்டைப் பூச்சி முதலியவைகளைக் கொல்லுவது முற்றும் நியாயமானதே என்று கருதினேன். மூட்டைப் பூச்சிகள் போன்ற ஐந்துகளைக் கொல்லுவது ஒரு கடமை எனக் கருதி அந்த வயதில் அவற்றை நான் கொன்றது எனக்கு நினைவிருக்கிறது.
ஆனால், ஒன்று மாத்திரம் என்னுள் ஆழ வேரூன்றியது; ‘ஒழுக்கமே எல்லாவற்றிற்கும் அடிப்படை ; சத்தியமே ஒழுக்கமெல்லாவற்றின் சாரமும் ’ என்று நான் கொண்ட உறுதியே அது. சத்தியம் என் ஒரே லட்சியமாயிற்று. ஒவ்வொரு நாளும் அதன் மகிமை வளரலாயிற்று. அதற்கு நான் கொண்ட பொருளும் விரிவாகிக் கொண்டே வந்தது.
அதேபோல நன்னெறியைப் போதிக்கும் ஒரு குஜராத்திப் பாடலும் என் அறிவையும் உள்ளத்தையும் கொள்ளை கொண்டது. ‘ தீமை செய்தோருக்கும் நன்மையே செய் ’ என்ற அப்பாடலின் போதனை, என் வாழ்க்கையில் வழிகாட்டும் தருமமாயிற்று. அதில் எனக்கு அதிக பிரேமை உண்டாகி விட்டதால் அதை மேற்கோளாகக் கொண்டு பற்பல சோதனைகளையும் செய்யத் தொடங்கினேன். மிக அற்புதமானவை என நான் எண்ணும் அப்பாடலின் வரிகள் இவை:
‘உண்ணும் நீர் தந்த ஒருவனுக்குக் கைம்மாறாய் விண்ணமுதைப்போல்அன்னம் விரும்பிப் படைத்திடுவாய். அன்போடு கும்பிட்டால் அடிபணிந்து நீதொழுவாய். செம்பான காசுக்குச் செம்பொன்னைத் தந்திடுவாய். உயிர்காத்தோன்துன்பத்தை உயிர்கொடுத்து நீ துடைப்பாய். செயலாலும் சொல்லாலும் சிந்தையினாலும் பெரியோர் சின்னஞ்சிறு உதவி செய்தவர்க்கு எந்நாளும் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 40, புத்தகங்கள், நான், பக்கம், சோதனை, சத்ய, கொல்லுவது, அப்பாடலின், வயதில், சிறந்த, படிக்க