சத்ய சோதனை - பக்கம் 32
இவ்விதமான உயர்வான மன்னிக்கும் குணம் என் தந்தைக்கு இயல்பானதன்று. கோபமடைவார் ; கடுஞ் சொற்களைக் கூறுவார்; தலையில் அடித்துக் கொள்ளுவார் என்றெல்லாம் நான் நினைத்திருந்தேன். ஆனால், அவரோ அவ்வளவு அற்புதமாக அமைதியுடன் இருந்தார். மறைக்காமல் எல்லாவற்றையும் நான் ஒப்புக்கொண்டதே இதற்குக் காரணம் என்று நம்புகிறேன். மன்னிப்பு அளிப்பதற்கு உரிமை உள்ளவரிடம் குற்றத்தை ஒளியாது ஒப்புக்கொண்டு விடுவதோடு, இனி அத்தகைய பாவத்தைச் செய்வதில்லை என்றும் உறுதிமொழி கூறுவதே செய்த குற்றத்திற்காகச் சரியான வகையில் வருத்தப்படுவதாகும். என் குற்றத்தை நான் ஒப்புக் கொண்டுவிட்டது, என்னைப்பற்றிக் கவலையே இல்லை என்று என் தந்தையாரை உணரும்படி செய்தது என்பதை அறிவேன். என் மீதுள்ள அவரது அன்பையும் அளவு கடந்து அதிகரிக்கும்படி இது செய்தது.
9. தந்தையின் மரணமும் என் இரு அவமானங்களும் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 32, நான், புத்தகங்கள், சோதனை, சத்ய, பக்கம், குற்றத்தை, செய்தது, மருந்து, அவர், இருந்தார், என்பதை, அகிம்சை, இதில், சிறந்த, தந்தையின், அத்தகைய, இல்லை, தந்தைக்கு