சத்ய சோதனை - பக்கம் 148
எனினும், ஸ்ரீ கோட்ஸ் அவ்வளவு சுலபத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டுவிடக் கூடியவர் அன்று. என்மீது அவருக்கு மிகுந்த அன்பு உண்டு. வைஷ்ணவத்திற்கு அடையாளமான துளசி மணிமாலை, என் கழுத்தில் இருப்பதை அவர் பார்த்தார். அது மூடநம்பிக்கை என்று எண்ணி, அதற்காக மனம் வருந்தினார்; இந்த மூடநம்பிக்கை உங்களுக்கு ஆகாது, வாருங்கள் அந்த மாலையை நான் அறுத்து எறிந்து விடுகிறேன் என்றார்.
“இல்லை. நீங்கள் அப்படிச் செய்துவிடக் கூடாது. இம் மாலை, என் அன்னை எனக்கு அளித்த தெய்வீக வெகுமதி” என்றேன்.
“ஆனால், இதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா!” என்று கேட்டார்.
“இம்மாலையிலிருக்கும் தெய்வீக ரகசியம் இன்னது என்பது எனக்குத் தெரியாது. இதை நான் அணியாவிட்டால் எனக்குத் தீமை உண்டாகிவிடும் என்று நான் நினைக்கவும் இல்லை. அன்பினாலும், இது என்னுடைய சுகத்திற்கு உதவியாக இருக்கும் என்ற திட நம்பிக்கையுடனும் என் தாயார் இதை என் கழுத்தில் அணிவித்தார். ஆகையால், தக்க காரணமின்றி இதை நான் எறிந்துவிட முடியாது. நாளாவட்டத்தில் இது இற்றுப்போய்த் தானாகவே அறுந்துவிடுமானால், புதிதாக ஒன்றைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருக்காது. ஆனால், இந்த மாலையை அறுத்துவிட முடியாது” என்றேன்.
என் மத விஷயத்தில் ஸ்ரீ கோட்ஸூக்கு மதிப்பு இல்லாததனால் என் வாதத்தை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அஞ்ஞானப் படுகுழியிலிருந்து என்னைக் கரையேற்றிவிட வேண்டுமென்று அவர் ஆவல் கொண்டிருந்தார். மற்ற மதங்களில் ஓரளவுக்கு உண்மை இருந்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை. கிறிஸ்தவத்தை நான் ஒப்புக்கொண்டாலன்றி எனக்கு விமோசனமே இல்லை என்பதை நான் உணர்ந்துவிடச் செய்ய அவர் விரும்பினார். எனக்காக ஏசுநாதர் ஆண்டவனிடம் பரிந்து பேசினாலன்றிப் பாவங்களிலிருந்து நான் மன்னிப்புப் பெற இயலாது என்றும், செய்யும் நற்காரியங்களெல்லாம் பயனற்றுப் போய்விடும் என்றும் நான் உணரச் செய்ய அவர் முயன்றார்.
பல புத்தகங்களை அவர் அறிமுகம் செய்து வைத்ததைப் போலவே,
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 148, நான், அவர், புத்தகங்கள், எனக்கு, பக்கம், என்பதை, சோதனை, சத்ய, எனக்குத், என்றேன், தெய்வீக, இல்லை, செய்ய, என்றும், மாலையை, மூடநம்பிக்கை, சிறந்த, உண்டு, ஸ்ரீ, கழுத்தில், வாதங்கள், உங்களுக்கு