சத்ய சோதனை - பக்கம் 127
அப்துல்லா சேத், எழுதப் படிக்கத் தெரியாதவர் என்றே சொல்லலாம். ஆனால், மிகுந்த அனுபவ ஞானம் உள்ளவர். அதிகக் கூர்மையான அறிவு படைத்தவர். தமக்குப் புத்திசாலித்தனம் அதிகம் உண்டு என்பதை அவரும் உணர்ந்திருந்தார். பழக்கத்தினால், பேசுவதற்குப் போதுமான அளவு அவருக்கு ஆங்கிலமும் தெரியும். அதைக் கொண்டு அவர், பாங்க் மானேஜர்களிடமோ, ஐரோப்பிய வர்த்தகர்களிடமோ பேசியும், தமது வழக்குச் சம்பந்தமாக வக்கீல்களிடம் தமது கட்சியை விளக்கியும் வியாபாரத்தை நடத்திக் கொண்டிருந்தார். இந்தியர்களுக்கு அவரிடம் உயர்ந்த மதிப்பு உண்டு. அச்சமயம் இந்தியரின் வியாபார ஸ்தலங்களில் அவருடைய கம்பெனியே மிகப் பெரியது ; அல்லது பெரியவைகளில் ஒன்று என்றாவது சொல்ல வேண்டும். இவ்வளவு சாதகமான வசதிகளெல்லாம் இருந்தும், அவருக்குப் பிரதிகூலமானதும் ஒன்று உண்டு. அது, அவர் சுபாவத்திலேயே சந்தேகப் பிராணியாக இருந்ததுதான்.
இஸ்லாம் மதத்தின் சிறப்பில் அவர் பெருமைகெள்ளுபவர். அம்மதத்தின் தத்துவங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதிலும் அவருக்குப் பிரியம் அதிகம். அவருக்கு அரபு மொழி தெரியாது. என்றாலும் பொதுவாகத் திருக் குர் ஆனிலும், இஸ்லாமிய இலக்கியத்திலும் அவருக்கு ஓரளவு நல்ல ஞானம் உண்டு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 127, அவர், புத்தகங்கள், உண்டு, என்னை, அவருக்கு, முடியும், சோதனை, சத்ய, பக்கம், அதிகம், தமது, ஒன்று, ஞானம், அவருக்குப், பிரிட்டோரியாவில், என்னுடைய, சிறந்த, எந்த, அவருடைய, கண்டிக்க, தவறு, வழக்குச்