சத்ய சோதனை - பக்கம் 106
எனக்கு அவரிடம் எவ்வளவோ மதிப்பு இருந்தும், என் குருநாதராக எனது இதயபீடத்தில் அவரை நான் அமர்த்திக் கொள்ளவில்லை. அந்தச் சிம்மாசனம் இன்னும் காலியாகவே இருக்கிறது; அதில் அமர்வதற்கு ஏற்றவரை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்.
குருவைக் குறித்தும்,ஆன்ம ஞானத்தை அடையும் விஷயத்தில் குருவின் அவசியத்தைப் பற்றியும் கூறும் ஹிந்து தத்துவத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. குருவின்றி உண்மையான ஞானம் ஏற்பட முடியாது என்ற தத்துவத்திலும் அதிக உண்மை உண்டு என்றே நினைக்கிறேன். உலக விவகாரங்களில் அரைகுறையான ஆசானைச் சகித்துக்கொள்ள முடியலாம். ஆனால், ஆன்மீக காரியங்களில் சகிக்க முடியாது. பூரணத்துவம் உள்ள ஒரு ஞானியே குருபீடத்தில் அமர அருகதை உடையவர். ஆகையால் அந்தப் பூரணத்துவத்தை நாடுவதில் இடைவிடாது பாடுபடவேண்டும். ஏனெனில்,அவனவனுக்கு ஏற்ற குருவையே அவனவன் அடைகிறான். பூரணத்துவத்தை அடைய இடைவிடாது பாடுபடுவது ஒருவரின் உரிமை. அதுவே அதனால் அடையும் பலனும் ஆகும். மற்றவை எல்லாம் கடவுளின் சித்தத்தைப் பொறுத்தவை.
இவ்விதம் ராய்ச்சந்திர பாயை என் உள்ளத்தின் சிங்காசனத்தில் குருவாக அமர்த்திக்கொள்ள என்னால் இயலாவிட்டாலும், அவர் அநேக சந்தர்ப்பங்களில் எவ்விதம் எனக்கு வழிகாட்டியாகவும், உதவி செய்பவராகவும் இருந்திருக்கிறார் என்பதைப் போகப் போகப் பார்ப்போம். இக்காலத்தவர்களில் என் உள்ளத்தைக் கவர்ந்து, என்
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 106, புத்தகங்கள், அவர், நான், எனக்கு, பக்கம், முடியாது, சோதனை, சத்ய, உண்டு, அடையும், பூரணத்துவத்தை, இடைவிடாது, இன்னும், போகப், அவருடைய, சிறந்த, அவரிடம், எல்லாம், எனக்குப், ஆகையால்