சிறுபாணாற்றுப்படை - பத்துப்பாட்டு
ஏழு வள்ளல்களின் சிறப்பு
வானம் வாய்த்த வளமலைக் கவாஅற் கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய |
85 |
அருந்திற லணங்கி னாவியர் பெருமகன் பெருங்க னாடன் பேகனுஞ் சுரும்புண |
இது முதல் ஏழு வள்ளல்களின் கொடைத்திறன் போற்றப்படுகிறது. (இவர்களை நாம் கடையெழு வள்ளல்கள் என்று வழங்குகிறோம்). இந்த ஏழு பேர் இழுத்துச் சென்ற ஈகை என்னும் தேரை இழுக்கும் நுகத்தை நல்லியக்கோடன் தனி ஒருவனாகவே இழுத்துச் சென்றான் என்று பாடல் வளர்கிறது. அதாவது, அந்த ஏழு வள்ளல்களுக்குப் பின்னர் இருந்த ஒரே ஒரு வள்ளல் இவன் மட்டுமே எனப் போற்றப்படுகிறான்.
அரிய உடல்திறனும், கண்டவரை வருத்தும் கட்டழகும் கொண்டவர்கள் ஆவியர்-குடி மக்கள். தலைவன் பேகன். பெருங்கல் நாடு எனப் போற்றப்படும் பழனிமலைப் பகுதியில் வாழ்பவர்கள் அந்த ஆவியர் குடி மக்கள். பேகன் ஒருநாள் மழை பொழியும் மலைச்சாரல் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது மயில் ஒன்று ஆடுவதைப் பார்த்து, அது குளிரில் நடுங்குவதாக எண்ணித் தன் போர்வையை அதன்மீது போர்த்தி விட்டவன்.
நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச் சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரல். |
90 |
பறம்பிற் கோமான் பாரியுங் கறங்குமணி |
அருவி விழும் காட்சி தொலைதூரம் தெரியும் மலை பறம்புமலை இவன் அந்தப் பறம்புமலைத் தலைவன். ஒருநாள் நாகமலைப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது படர்வதற்குப் பற்றுக்கோடு இல்லாமல் ஆடிக்கொண்டிருந்த சுரும்புத் தேனீக்கள் தேன் உண்ணும் முல்லைக்கொடி படர்வதற்குப் படர்வதற்குக் கொழுகொம்பு இல்லாமல் ஆடிக்கொண்டிருந்ததைப் பார்த்து, அது படர்வதற்காகத் தன் மிகப் பெரிய தேரையே நிறுத்தி விட்டுச் சென்றவன்
வாலுளைப் புரவியொடு வையக மருள வீர நன்மொழி யிரவலர்க் கீந்த வழறிகழ்ந் திமைக்கு மஞ்சுவரு நெடுவேற் கழறொடித் தடக்கைக் காரியு நிழறிகழ் |
95 |
இவனது கையில் உள்ள வாள் பகைவர்களை வீசிச் செந்நிறம் கொண்டு ஒளிரும். ஆனால் இவனோ தன்னைத் தேடிவந்து கேட்டவர்களுக்கு ஒலிக்கும் மணி கட்டியிருக்கும் வெண்மயிர்ப் பிடரிக் குதிரைகளைப் பரிசாக வழங்கினான். அப்போது அவன் பேசும் அன்பு மொழிகள் விதை முளைக்க உதவும் ஈரநிலம் போன்றவை. அந்த உரை உலகத்தையே வியப்பில் ஆழ்த்துபவை.
நீல நாக நல்கிய கலிங்க ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோ ளார்வ நன்மொழி யாயு மால்வரைக் |
இவன் மகிழ்ந்திருக்கும்போது சந்தனம் பூசிய கோலத்தோடு காட்சி தருபவன். சினந்திருக்கும்போது வில்லும் கையுமாகத் திரிபவன். ஆலமரத்தடியில் குடிகொண்டிருந்த சிவபெருமானின் சிலை ஆடை இல்லாமல் இருப்பதைக் கண்ட இவன் நச்சு (நீலம்) கொண்ட நாகப்பாம்பு ஒன்று இவனுக்குத் தந்த மேலாடையை அச்சிலைக்குப் போர்த்தி மகிழ்ந்தான்.
கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்ல | 100 |
யமிழ்துவிளை தீங்கனி யெளவைக் கீந்த வுரவுச்சினங் கனலுமொளிதிகழ் நெடுவே லரவக்கடற் றானை யதிகனுங் கரவாது |
அதிகன் = அதியன் = அதியமான். = அதியமான் நெடுமான் அஞ்சி = அஞ்சி. (இவன் தன் ஆட்சியின் பெரும்பகுதி போரிலேயே கழித்துள்ளதை இவனது வரலாற்றிலிருந்து அறிவோம். ) வேல் வீச்சில் இவன் வல்லவன். பொதுவாகப் பிறரை உரசிப் பார்க்கும் சினம் இவனுக்கு உண்டு. ஆர்பரித்துக்கொண்டே இருக்கும் கடல் போல் போர் வேண்டும் என ஆரவாரம் செய்யும் படையும் இவனிடம் இருந்தது. பூஞ்சாரலில் பழுத்திருந்த அரிய நெல்லிக்கனி ஒன்று இவனுக்குத் தரப்பட்டது. அது சாவாமையைத் தரும் அமிழ்தம் போன்றது. அதனைத் தான் உண்ணாமல் புலவர் ஔவையாருக்குக் கொடுத்து அவரை நீண்ட நாள் வாழச் செய்தவன் இவன்.
நட்டோ ருவப்ப நடைப்பரி கார முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத் |
105 |
துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு நளிமலை நாட னள்ளியு நளிசினை |
நள்ளி. இவன் மலைநாட்டுத் தலைவன். பாடலில் தரப்பட்டுள்ள செய்திகளைப் பார்க்கும்போது இவனது மலை உதகை மலையாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. வளி துஞ்சு நெடுங்கோடு என்று பாடலில் கூறப்படுவது தொட்டபெட்டா மலைமுகடு எனலாம். துளிமழை என்பது மேகமூட்டம். நளிமலை என்பது குளிர் மிகுதியாக உடைய மலை. முனைமுகத்தில் புகழுடன் விளங்கும் இவனது கைகள் நண்பர்களிடம் அவர்களின் வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தையும் நல்குவதில் புகழ்பெற்று விளங்கியது. நடைப்பரிகாரம் என்பது வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய வாழ்க்கை வசதிப் பொருள்கள்.
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகக்துக் குறும்பொறை நன்னாடு கோடியர்க் கீந்த காரிக் குதிரைக் காரியொடு மலைந்த |
110 |
வோரிக் குதிரை யோரியு மெனவாங் |
ஓரி. ஓரி என்னும் பெயர் கொண்ட குதிரையில் ஏறிச்சென்று ஓரி தாக்கினான். காரி என்னும் பெயர் கொண்ட குதிரையில் வந்து காரி எதிர்த்துப் போரிட்டான். முடிவில் காரியின் குறும்பறை நன்னாடு ஓரிக்குக் கிடைத்தது. போர் வெற்றியில் கிடைத்த அந்த நாட்டைத் தனது போர் வெற்றியைப் புகழ்ந்து யாழ் மீட்டிப் பாடிய பாணர்களுக்குக் கொடுத்தவன் ஓரி. நாகு முதிர் நாகம் குறும்பொறை நன்னாடு – நாகு என்னும் நாகமரங்கள் மிகுதியாக இருந்ததால் ‘நாகம்’ என்னும் பெயரைப் பெற்றிருந்த நாகமலையை உடைய ‘குறும்பொறை நாடு’
கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணிதோ ளெழுவர் பூண்ட வீகைச் செந்நுகம் |
நல்லியக்கோடனின் தலைமைச் சிறப்பு
விரிகடல் வேலி வியலகம் விளங்க வொருதான் றாங்கிய வுரனுடைய நோன்றா |
115 |
நல்லியக்கோடன் காலத்துக்கு முன்பு மேலே குறிப்பிட்ட ஏழு வள்ளல் பெருமக்கள் ஈகை என்னும் தேரை ஏழு நுகங்கள் கட்டி ஆங்காங்கே இழுத்துச் சென்றனர். அவர்களது காலத்திற்குப் பிறகு நல்லியக்கோடன் தனியொருவனாக ஈகைத் தேரின் நுகத்தைத் தாங்கி இழுத்துச் செல்கிறான், என்கிறார் ஆற்றுப்படுத்தும் புலவர். நல்லியக்கோடன் ‘எழுசமம் கடந்தவன். அதாவது சொல்லப்பட்ட எழுவரின் சமநிலையைக் கடந்து மேம்பட்டவன். மேலும் எழு உறழ் திணிதோள் கொண்டவன், அதாவது கணையமரம் போன்ற தோளை உடையவன், இது இவனுடைய மாபெரும் கொடைத் தன்மையைக் காட்டுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுபாணாற்றுப்படை - பத்துப்பாட்டு, இவன், என்னும், அந்த, இழுத்துச், நல்லியக்கோடன், இவனது, இலக்கியங்கள், சிறுபாணாற்றுப்படை, பத்துப்பாட்டு, என்பது, தலைவன், போர், கீந்த, ஒன்று, இல்லாமல், கொண்ட, அதாவது, நல்கிய, நன்னாடு, இவனுக்குத், புலவர், அதியமான், அஞ்சி, இருக்கும், உடைய, பெயர், குதிரையில், காரி, நாகு, வாழ்க்கை, வேண்டிய, நளிமலை, பாடலில், மிகுதியாக, திணிதோ, துளிமழை, போர்த்தி, வள்ளல், எனப், அரிய, ஆவியர், தேரை, கலிங்க, சங்க, வள்ளல்களின், சிறப்பு, குடி, மக்கள், காட்சி, படர்வதற்குப், நன்மொழி, பார்த்து, சென்றுகொண்டிருந்தபோது, பேகன், ஒருநாள், பாதையில், கொடுத்த