நெடுநல்வாடை - பத்துப்பாட்டு
கோபுர வாயில்
ஒருங்குடன் வளைஇ ஓங்குநிலை வரைப்பிற் பருவிரும்பு பிணித்துச் செல்வரக் குரீஇத் |
80 |
துணைமாண் கதவம் பொருத்தி இணைமாண்டு நாளொடு பெயரிய கோளமை விழுமரத்துப் போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துத் தாளொடு குயின்ற போரமை புணர்ப்பிற் கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து |
85 |
ஐயவி யப்பிய நெய்யணி நெடுநிலை வென்றெழு கொடியோடு வேழஞ் சென்றுபுகக் குன்றுகுயின் றன்ன ஓங்குநிலை வாயில் |
வளைந்த முகடுகளை உடைய மனை. அதில் யானை வெற்றிக் கொடியுடன் புகும் அளவுக்கு உயர்ந்தோங்கிய நிலைவாயில். குன்றைக் குடைந்தது போல் தோன்றும் நிலைவாயில். அதில் இரட்டைக் கதவு. கதவைத் தாங்கும் இரும்பு ஆணி. அரக்கு சேர்த்துப் பிணித்த மரக்கதவு. அதற்கு ‘உத்தரம்’ என்னும் நாள்மீனின் பெயர் கொண்ட நிலை. நிலையில் குவளைப்பூவின் மொட்டு போல் கலைத்திற வேலைப்பாடுகள். கதவுக்குத் தாழ்ப்பாள். இவற்றையெல்லாம் செய்தமைத்தவன் ‘கைவல் கம்மியன்’. தாழ்ப்பாளும், கதவைத் தாங்கும் இரும்பாணியும் எளிதாக இயங்கும் பொருட்டு ஐயவி என்னும் வெண்சிறு கடுகு எண்ணெய்ப் பூச்சு. – இப்படி அந்த வாயில் அமைக்கப்பட்டிருந்தது.
முற்றமும் முன்வாயிலும்
திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின் தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து |
90 |
நெடுமயி ரெகினத் தூநிற ஏற்றை குறுங்கால் அன்னமோ டுகளு முன்கடைப் |
அரசி அரண்மனைக்குத் ‘திருநகர்’ என்று பெயர். அதன் முன்புறமும் பின்புறமும் முற்றம். வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட மணல் பரப்பப்பட்டுள்ள முற்றம். அதில் வெண்ணிற எகினமும், அன்னமும் துள்ளி விளையாடிக்கொண்டிருந்தன.
அரண்மனையில் எழும் ஓசைகள்
பணைநிலை முனைஇய பல்லுளைப் புரவி புல்லுணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு நிலவுப்பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்துக் |
95 |
கிம்புரிப் பகுவாய் அம்பண நிறையக் கலுழ்ந்துவீழ் அருவிப் பாடிறந் தயல ஒலிநெடும் பீலி ஒல்க மெல்லியல் கலிமயில் அகவும் வயிர்மருள் இன்னிசை நளிமலைச் சிலம்பிற் சிலம்புங் கோயில |
100 |
கட்டிக் கிடப்பதை விரும்பாத குதிரைகள் புல் உணவைத் தெவிட்டும் புலம்பல் ஒலி. நிலா-முற்றத்தில் மகரமீன் வாயிலிருந்து நீர் விழுவது போல் அமைக்கப்பட்டிருந்த கிம்புரிப் பகுவாய். அதன் வழியாக ‘அம்பணம்’ என்னும் தொட்டியில் விழும் அருவி-நீரின் ஒலி. அருகே தோகை-மயில் கொம்பூதும் ஒலி போல் சிலம்பும் ஒலி. – இப்படிப்பட்ட ஓசை அந்த மனைக்கோயிலில் கேட்டுக்கொண்டிருந்தன.
அந்தப்புரத்தின் அமைப்பு
யவனர் இயற்றிய வினைமாண் பாவை கையேந் தையகல் நிறையநெய் சொரிந்து பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிரெரி அறுஅறு காலைதோ றமைவரப் பண்ணிப் பல்வேறு பள்ளிதொறும் பாயிருள் நீங்கப் |
105 |
பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை யல்லது ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின் வரைகண் டன்ன தோன்றல வரைசேர்பு வில்கிடந் தன்ன கொடிய பல்வயின் வெள்ளி யன்ன விளங்குஞ் கதையுரீஇ |
110 |
மணிகண் டன்ன மாத்திரள் திண்காழ்ச் செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர் உருவப் பல்பூ ஒருகொடி வளைஇக் கருவொடு பெயரிய காண்பி னல்லில் |
அரசியின் கருவறையில் பாவை விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அந்தப் பாவை விளக்கு யவனர் கலைஞர்களால் செய்யப்பட்டது. ஐந்து திரிமுனைகள் கொண்டது. பருமனான திரியிடப்பட்டு அது எரிந்துகொண்டிருந்தது. அது ஒளி மங்கும்போதெல்லாம் எண்ணெய் ஊற்றித் தூண்டப்பட்டது. அங்கே பல்வேறு படுக்கைகள் இருந்தன. அதற்குள் அரசன் தவிர வேறு எந்த ஆணும் செல்வதில்லை. அது மலை போல் தோன்றும் மனை. அதில் மலைமேல் வானவில் கிடப்பது போல் துணிக்கொடிகள் பறந்துகொண்டிருந்தன. அது வெள்ளி போல் சுண்ணாம்பு அடிக்கப்பட்ட வெள்ளை மாளிகை. சுவர் செம்பால் செய்யப்பட்டது போல் இருந்தது. அதில் வளைந்து வளைந்து கொடி படர்வது போல் மணிகள் பதிக்கப்பட்டிருந்தன. அந்த மனைக்குக் கருவறை என்று பெயர்.
அரசி படுத்திருக்கும் வட்டக் கட்டில்
தசநான் கெய்திய பணைமருள் நோன்றாள் | 115 |
இகன்மீக் கூறும் ஏந்தெழில் வரிநுதல் பொருதொழி நாக மொழியெயி றருகெறிந்து சீருஞ் செம்மையும் ஒப்ப வல்லோன் கூருளிக் குயின்ற ஈரிலை யிடையிடுபு தூங்கியல் மகளிர் வீங்குமுலை கடுப்பப் |
120 |
புடைதிரண் டிருந்த குடத்த இடைதிரண்டு உள்ளி நோன்முதல் பொருத்தி அடியமைத்துப் பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டில் |
அரசியின் கட்டிலின் கால்கள் 40 ஆண்டுகள் நிறைந்த யானையின் தந்தத்தால் செய்யப்பட்டவை. யானைகள் உணர்வில் மாறுபட்டு ஒன்றோடொன்று போரிடும்போது முரிந்த தந்தங்கள் அவை. அவற்றில் கலைவல்லவன் உளியால் தோண்டி வேலைப்பாடுகளைச் செய்திருந்தான். இரட்டை இலை வேலைப்பாடுகள் அதில் செய்யப்பட்டிருந்தன. மகளிர் முலைகள் போல் குட அமைப்புகளும், வெங்காயம் முளைப்பது போன்ற அமைப்புகளும் அதில் இருந்தன. அந்தக் கட்டிலைப் ‘பாண்டில்’ என்று வழங்கினர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நெடுநல்வாடை - பத்துப்பாட்டு, போல், அதில், இலக்கியங்கள், நெடுநல்வாடை, பெயர், பத்துப்பாட்டு, அந்த, என்னும், பாவை, வாயில், பல்வேறு, பகுவாய், யவனர், டன்ன, அரசியின், இருந்தன, வளைந்து, மகளிர், செய்யப்பட்டது, எரிந்துகொண்டிருந்தது, அமைப்புகளும், கிம்புரிப், விளக்கு, வெள்ளி, வேலைப்பாடுகள், குயின்ற, ஐயவி, பெயரிய, பொருத்தி, சங்க, ஓங்குநிலை, றன்ன, நிலைவாயில், அரசி, முற்றம், தாங்கும், கதவைத், தோன்றும், தெவிட்டும்