திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு

| கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி; கொண்டன செய் வகை செய்வான் தவசி; கொடிது ஒரீஇ, நல்லவை செய்வான் அரசன்; - இவர் மூவர், 'பெய்' எனப் பெய்யும் மழை. |
96 |
கணவனுடைய குறிப்பறிந்து நடக்கும் மனைவியும், நோன்புகளை முறைப்படி செய்யும் தவசியும், நன்மைகளைச் செய்யும் அரசனும் பெய் என்று சொல்ல மழை பொழியும்.
| ஐங் குரவர் ஆணை மறுத்தலும், ஆர்வு உற்ற எஞ்சாத நட்பினுள் பொய் வழக்கும், நெஞ்சு அமர்ந்த கற்பு உடையாளைத் துறத்தலும், - இம் மூன்றும் நற் புடையிலாளர் தொழில். |
97 |
பெரியோர்களுடைய கட்டளையை மறுத்து நடத்தலும், நண்பனிடம் பொய் பேசுதலும், கற்புடைய மனைவியைத் துறத்தலும், பாவச் செயல்கள் ஆகும்.
| செந் தீ முதல்வர் அறம் நினைந்து வாழ்தலும், வெஞ் சின வேந்தன் முறை நெறியால் சேர்தலும், பெண்பால் கொழுநன் வழிச் செலவும், - இம் மூன்றும் திங்கள் மும் மாரிக்கு வித்து. |
98 |
அந்தணர்கள் தமக்குரிய அறத்தை மறவாது வாழ்தலும், அரசன் முறையாக ஆள்வதும், தன் கணவன் குறிப்பின் வழியில் நடத்தலும், மாதம் தோறும் பெய்ய வேண்டிய மழைக்குக் காரணங்களாகும்.
| கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும், காமுற்று பெட்டாங்கு செய்து ஒழுகும் பேதையும், முட்டு இன்றி அல்லவை செய்யும் அலவலையும், - இம் மூவர் நல் உலகம் சேராதவர். |
99 |
கற்றவன் கைவிட்டு வாழ்தலும், விரும்பியவற்றைச் செய்யும் அறிவில்லாதவனும், தீங்கு செய்து அவற்றைப் பேசுதலும் கொண்டவர்கள், நல் உலகம் சேர மாட்டார்கள்.
| பத்திமை சான்ற படையும், பலர் தொகினும் எத் திசையும் அஞ்சா எயில்-அரணும், வைத்து அமைந்த எண்ணின் உலவா இரு நிதியும், - இம் மூன்றும் மண் ஆளும் வேந்தர்க்கு உறுப்பு. |
100 |
அன்பு நிறைந்த படையும், பகைவர் பலர் கூடி எதிர்ப்பினும் அஞ்சாத அரணும், எண்ண முடியாத அளவிற்கு இருக்கும் செல்வமும், ஆகிய இம்மூன்றும், பூமியை ஆள்கின்ற வேந்தர்க்கு உறுப்புகளாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு, வாழ்தலும், செய்யும், இலக்கியங்கள், திரிகடுகம், பதினெண், மூன்றும், கீழ்க்கணக்கு, செய்து, கைவிட்டு, பலர், வேந்தர்க்கு, அரணும், படையும், உலகம், துறத்தலும், அரசன், செய்வான், சங்க, மூவர், பெய், நடத்தலும், பொய், பேசுதலும்