பதிற்றுப்பத்து - 79. மன்னவனது பல குணங்களையும் ஒருங்கு புகழ்ந்து, வாழ்த்துதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நிறம் படு குருதி
உயிர் போற்றலையே, செருவத்தானே; கொடை போற்றலையே, இரவலர் நடுவண்; பெரியோர்ப் பேணி, சிறியோரை அளித்தி; நின்வயிற் பிரிந்த நல் இசை கனவினும் பிறர் நசை அறியா-வயங்கு செந் நாவின், |
5 |
படியோர்த் தேய்த்த ஆண்மை, தொடியோர் தோளிடைக் குழைந்த கோதை மார்ப!- அனைய அளப்பு அருங்குரையை: அதனால், நின்னொடு வாரார் தம் நிலத்து ஒழிந்து, கொல் களிற்று யானை எருத்தம் புல்லென, |
10 |
வில் குலை அறுத்து, கோலின் வாரா வெல் போர் வேந்தர் முரசு கண் போழ்ந்து, அவர் அரசு உவா அழைப்பக் கோடு அறுத்து இயற்றிய அணங்கு உடை மரபின் கட்டில்மேல் இருந்து, தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து, |
15 |
நிறம் படு குருதி புறம்படின் அல்லது, மடை எதிர்கொள்ளா அஞ்சுவரு மரபின் கடவுள் அயிரையின் நிலைஇ, கேடு இலவாக, பெரும! நின் புகழே! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - 79. மன்னவனது பல குணங்களையும் ஒருங்கு புகழ்ந்து, வாழ்த்துதல் , இலக்கியங்கள், மன்னவனது, வாழ்த்துதல், பதிற்றுப்பத்து, குணங்களையும், புகழ்ந்து, ஒருங்கு, போற்றலையே, அறுத்து, குருதி, மரபின், சங்க, எட்டுத்தொகை, வண்ணம், நிறம்