பதிற்றுப்பத்து - 73. வென்றிச் சிறப்பு
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நிறம் திகழ் பாசிழை
உரவோர் எண்ணினும், மடவோர் எண்ணினும், பிறர்க்கு நீ வாயின் அல்லது, நினக்குப் பிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தே! ....கூந்தல் ஒள் நுதல் பொலிந்த நிறம் திகழ் பாசிழை உயர்திணை மகளிரும் |
5 |
தெய்வம் தரூஉ நெஞ்சத்து ஆன்றோர் .... .... .... .... ... ... ... மருதம் சான்ற மலர்தலை விளை வயல் செய்யுள் நாரை ஒய்யும் மகளிர் இரவும் பகலும் பாசிழை களையார், |
10 |
குறும் பல் யாணர்க் குரவை அயரும் காவிரி மண்டிய சேய் விரி வனப்பின் புகாஅர்ச் செல்வ! பூழியர் மெய்ம்மறை! கழை விரிந்து எழுதரு மழை தவழ் நெடுங் கோட்டுக் கொல்லிப் பொருந! கொடித் தேர்ப் பொறைய! 'நின் |
15 |
வளனும் ஆண்மையும் கைவண்மையும் மாந்தர் அளவு இறந்தன' எனப் பல் நாள் யான் சென்று உரைப்பவும் தேறார்; 'பிறரும் சான்றோர் உரைப்பத் தெளிகுவர்கொல்?' என, ஆங்கும் மதி மருளக் காண்குவல்; |
20 |
'யாங்கு உரைப்பேன்?' என வருந்துவல், யானே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - 73. வென்றிச் சிறப்பு , இலக்கியங்கள், பாசிழை, சிறப்பு, வென்றிச், பதிற்றுப்பத்து, எண்ணினும், திகழ், நிறம், எட்டுத்தொகை, வண்ணம், சங்க