பதிற்றுப்பத்து - 67. கொடைச் சிறப்பு
துறை : பாணாற்றுப்படை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வெண் போழ்க் கண்ணி
கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு பந்தர்ப் பெயரிய பேர் இசை மூதூர், கடன் அறி மரபின் கை வல் பாண! தென் கடல் முத்தமொடு நன் கலம் பெறுகுவை- கொல் படை தெரிய, வெல் கொடி நுடங்க, |
5 |
வயங்கு கதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்ப, பல் களிற்று இன நிரை புலம் பெயர்ந்து இயல்வர, அமர்க்கண் அமைந்த அவிர் நிணப் பரப்பின் குழூஉச் சிறை எருவை குருதி ஆர, தலை துமிந்து எஞ்சிய ஆண் மலி யூபமொடு |
10 |
உரு இல் பேய் மகள் கவலை கவற்ற, நாடுடன் நடுங்க, பல் செருக் கொன்று; நாறு இணர்க் கொன்றை வெண் போழ்க் கண்ணியர், வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர், நெறி படு மருப்பின் இருங் கண் மூரியொடு |
15 |
வளை தலை மாத்த தாழ் கரும் பாசவர் எஃகு ஆடு ஊனம் கடுப்ப, மெய் சிதைந்து; சாந்து எழில் மறைத்த சான்றோர் பெருமகன்- மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய கடும் பறைத் தும்பி சூர் நசைத் தாஅய், |
20 |
பறை பண் அழியும் பாடு சால் நெடு வரைக் கல் உயர் நேரிப் பொருநன், செல்வக் கோமான் பாடினை செலினே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - 67. கொடைச் சிறப்பு , இலக்கியங்கள், கொடைச், பதிற்றுப்பத்து, சிறப்பு, வெண், போழ்க், சங்க, எட்டுத்தொகை, வண்ணம்