பதிற்றுப்பத்து - 61. வென்றிச் சிறப்பொடு படுத்து, அவன் கொடைச் சிறப்புக் கூறுதல்
துறை : காட்சி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : புலாஅம் பாசறை
'பலாஅம் பழுத்த பசும் புண் அரியல் வாடை தூக்கும் நாடு கெழு பெருவிறல், ஓவத்து அன்ன வினை புனை நல் இல், பாவை அன்ன நல்லோள் கணவன், பொன்னின் அன்ன பூவின், சிறியிலை, |
5 |
புன் கால், உன்னத்துப் பகைவன், எம் கோ, புலர்ந்த சாந்தின், புலரா ஈகை, மலர்ந்த மார்பின், மா வண் பாரி முழவு மண் புலர, இரவலர் இனைய, வாராச் சேண் புலம் படர்ந்தோன்; அளிக்க' என, |
10 |
இரக்கு வாரேன்; எஞ்சிக் கூறேன்; 'ஈத்தது இரங்கான்; ஈத்தொறும் மகிழான்; ஈத்தொறும் மா வள்ளியன்' என நுவலும் நின் நல் இசை தர வந்திசினே-ஒளி வாள் உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை, |
15 |
நிலவின் அன்ன வெளி வேல் பாடினி முழவில் போக்கிய வெளி கை விழவின் அன்ன, நின் கலி மகிழானே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - 61. வென்றிச் சிறப்பொடு படுத்து, அவன் கொடைச் சிறப்புக் கூறுதல் , அன்ன, இலக்கியங்கள், பதிற்றுப்பத்து, வென்றிச், சிறப்புக், கூறுதல், சிறப்பொடு, கொடைச், படுத்து, அவன், ஈத்தொறும், வெளி, நின், எட்டுத்தொகை, சங்க, வண்ணம், புலாஅம், பாசறை