பதிற்றுப்பத்து - 55. மன்னவன் உலகு புரத்தலும் தன் குறையும் கூறி, வாழ்த்துதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : துஞ்சும் பந்தர்
ஆன்றோள் கணவ! சான்றோர் புரவல! நின் நயந்து வந்தனன், அடு போர்க் கொற்றவ! இன் இசைப் புணரி இரங்கும் பௌவத்து, நன் கல வெறுக்கை துஞ்சும் பந்தர். கமழும் தாழைக் கானல்அம் பெருந் துறை, |
5 |
தண் கடற் படப்பை நல் நாட்டுப் பொருந! செவ் ஊன் தோன்றா, வெண் துவை முதிரை, வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை! குடவர் கோவே! கொடித் தேர் அண்ணல்! வாரார் ஆயினும் இரவலர், வேண்டி, |
10 |
தேரின் தந்து, அவர்க்கு ஆர் பதன் நல்கும் நசை சால் வாய்மொழி இசை சால் தோன்றல்!- வேண்டுவ அளவையுள் யாண்டு பல கழிய, பெய்து புறந்தந்து, பொங்கல் ஆடி, விண்டுச் சேர்ந்த வெண் மழை போலச் |
15 |
சென்றாலியரோ-பெரும! அல்கலும், நனந் தலை வேந்தர் தார் அழிந்து அலற, நீடு வரை அடுக்கத்த நாடு கைக்கொண்டு, பொருது சினம் தணிந்த செருப் புகல் ஆண்மை, தாங்குநர்த் தகைத்த ஒளி வாள், |
20 |
ஓங்கல் உள்ளத்துக் குருசில்! நின் நாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - 55. மன்னவன் உலகு புரத்தலும் தன் குறையும் கூறி, வாழ்த்துதல் , இலக்கியங்கள், பதிற்றுப்பத்து, மன்னவன், கூறி, வாழ்த்துதல், உலகு, புரத்தலும், குறையும், நின், வெண், சால், பந்தர், சங்க, எட்டுத்தொகை, துறை, வண்ணம், துஞ்சும்