பதிற்றுப்பத்து - 47. கொடையினையும் அக் கொடைக்கு வருவாயாகிய பகைவரைக் கோறலையும் உடன் கூறுதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நல் நுதல் விறலியர்
அட்டு ஆனானே குட்டுவன்; அடுதொறும், பெற்று ஆனாரே, பரிசிலர் களிறே; வரை மிசை இழிதரும் அருவியின், மாடத்து வளி முனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில், சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின், |
5 |
பாண்டில் விளக்குப் பரூஉச் சுடர் அழல, நல் நுதல் விறலியர் ஆடும் தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - 47. கொடையினையும் அக் கொடைக்கு வருவாயாகிய பகைவரைக் கோறலையும் உடன் கூறுதல், இலக்கியங்கள், கொடையினையும், பதிற்றுப்பத்து, உடன், கூறுதல், கொடைக்கு, கோறலையும், வருவாயாகிய, பகைவரைக், நுதல், விறலியர், சங்க, எட்டுத்தொகை, வண்ணம்