பதிற்றுப்பத்து - 37. மன்னன் குணங்களைப் புகழ்ந்து, அவனையும் அவன் செல்வத்தையும் வாழ்த்துதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வலம் படு வென்றி
வாழ்க, நின் வளனே நின்னுடை வாழ்க்கை, வாய்மொழி வாயர் நின் புகழ் ஏத்த!- பகைவர் ஆரப் பழங்கண் அருளி, நகைவர் ஆர நன் கலம் சிதறி, ஆன்று, அவிந்து, அடங்கிய, செயிர் தீர், செம்மால்! |
5 |
வான் தோய் நல் இசை உலகமொடு உயிர்ப்ப, துளங்கு குடி திருத்திய வலம் படு வென்றியும்; மா இரும் புடையல், மாக் கழல், புனைந்து, மன் எயில் எறிந்து மறவர்த் தரீஇ, தொல் நிலைச் சிறப்பின் நின் நிழல் வாழ்நர்க்குக் |
10 |
கோடு அற வைத்த கோடாக் கொள்கையும்; நன்று பெரிது உடையையால் நீயே, வெந்திறல் வேந்தே!-இவ் உலகத்தோர்க்கே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - 37. மன்னன் குணங்களைப் புகழ்ந்து, அவனையும் அவன் செல்வத்தையும் வாழ்த்துதல், இலக்கியங்கள், மன்னன், பதிற்றுப்பத்து, செல்வத்தையும், நின், வாழ்த்துதல், புகழ்ந்து, அவன், குணங்களைப், அவனையும், வலம், சங்க, எட்டுத்தொகை, வண்ணம்