பதிற்றுப்பத்து - 26. வென்றிச் சிறப்பு
துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : காடுறு கடு நெறி
தேஎர் பரந்த புலம் ஏஎர் பரவா; களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடா; மத்து உரறிய மனை இன் இயம் இமிழா; ஆங்கு, பண்டு நற்கு அறியுநர் செழு வளம் நினைப்பின்- நோகோ யானே-நோதக வருமே! |
5 |
பெயல் மழை புரவு இன்றுஆகி, வெய்துற்று, 'வலம் இன்று அம்ம, காலையது பண்பு!' என, கண் பனி மலிர் நிறை தாங்கி, கைபுடையூ, மெலிவுடை நெஞ்சினர் சிறுமை கூர, பீர் இவர் வேலிப் பாழ் மனை நெருஞ்சிக் |
10 |
காடுறு கடு நெறி ஆக மன்னிய- முருகு உடன்று கறுத்த கலி அழி மூதூர், உரும்பு இல் கூற்றத்து அன்ன, நின் திருந்து தொழில், வயவர் சீறிய நாடே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - 26. வென்றிச் சிறப்பு , இலக்கியங்கள், வென்றிச், பதிற்றுப்பத்து, சிறப்பு, நெறி, புலம், காடுறு, சங்க, எட்டுத்தொகை, வண்ணமும்