நற்றிணை - 63. நெய்தல்
உரவுக் கடல் உழந்த பெரு வலைப்பரதவர் மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண், கல்லென் சேரிப் புலவற் புன்னை விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும் அழுங்கல் ஊரோ அறன் இன்று; அதனால், |
5 |
அறன் இல் அன்னை அருங் கடிப் படுப்ப, பசலை ஆகி விளிவதுகொல்லோ- புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல் கழிச் சுரம் நிவக்கும் இருஞ் சிறை இவுளி திரை தரு புணரியின் கழூஉம் |
10 |
மலி திரைச் சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பே? |
வலிமையுடைய கடலிலே சென்று மீன் பிடித்தலில் வருந்திய பெரிய வலைகளையுடைய பரதவர்; மிக்க மீன்களைக் காயப் போகட்ட புதிய மணற் பரப்பாகிய அவ்விடத்து; கல்லென வொலிக்குஞ் சேரியை யடுத்த புலவு நாற்றத்திடத்துள்ள புன்னையின்; விழாவுக்குரிய மணமுடைய விளங்கிய பூங்கொத்து ஒருசேர விரிந்து மணங் கமழா நிற்கும் அலரெடுக்கின்ற பேரொலியையுடைய இவ்வூரோவெனில்; அறமுடையதில்லை; அதனால் புட்கள் வந்திருத்தலா லுதிர்ந்த பூக்கலந்த சேற்றினையுடைய கழியாகிய இடத்தின் மீதோடும் தேரிற் பூட்டிய பெரிய பிணிப்பையுடைய குதிரைகள்; அலையெழுந்து வரும் கடனீராலே கழுவப்படுகின்ற மிக்க கடற் சேர்ப்பனொடு பொருந்திய நமது தொடர்ச்சியானது; அறனில்லாத அன்னை இற்செறித்து அரிய காவலிற் படுத்தலாலே இங்ஙனம் பசலையாகி விளிந்தொழியக் கடவதுதானோ?
அலர் அச்சத்தால்தோழி சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது. - உலோச்சனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 63. நெய்தல், இலக்கியங்கள், நெய்தல், நற்றிணை, சேர்ப்பனொடு, பெரிய, மிக்க, அன்னை, மீன், எட்டுத்தொகை, சங்க, அறன், அதனால்