நற்றிணை - 58. நெய்தல்
பெரு முது செல்வர் பொன்னுடைப்புதல்வர் சிறு தோட் கோத்த செவ் அரிப்பறையின் கண்ணகத்து எழுதிய குரீஇப் போல, கோல் கொண்டு அலைப்பப் படீஇயர்மாதோ- வீரை வேண்மான் வெளியன் தித்தன் |
5 |
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின் வெண் கோடு இயம்ப, நுண் பனி அரும்ப, கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து, அவல நெஞ்சினம் பெயர, உயர் திரை நீடு நீர்ப் பனித் துறைச் சேர்ப்பன் |
10 |
ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மாவே! |
'உறையூரின்' கண் அரசாண்ட, வீரைவேண்மான் வெளியன் என்னும் தித்தனுடைய முரசு முதலியவற்றோடு வெளிய சங்குகள் ஒலியாநிற்பச் சிறிய பனியுண்டாக வரிசையாக எடுக்கப்பட்ட விளக்குகளுடனே; சென்று எதிர் கொள்ளுகின்ற பிரிந்துறை மகளிர் செயலறும்படி வந்த மாலைப்பொழுதிலே; மெய் சோர்ந்து வருந்திய மனத்தேமாகிப் பெயர்ந்து போகும்வண்ணம்; ஓங்கி யெழுகின்ற அலைகளையுடைய நீண்ட நீர்வடிவாகிய கடலின் குளிர்ந்த துறையையுடைய சேர்ப்பனது, ஓடு தேர் நுண் நுகம் நுழைத்த மா ஓடுகின்ற தேரின் நுண்ணிய நுகத்திற் பூட்டப்பட்டுச்¢ செல்லுகின்ற குதிரைகள் தாம்; முற்செய்த தவத்தாற் பெற்ற முதிர்ந்த செல்வரின் பொன்னணிகளையுடைய புதல்வர்; சிறிய தோளில் மாட்டிய செவ்விதின் ஒலிக்கும் பறையின் கண்ணில் எழுதிய குருவி அடி படுதல் போல; கோலைக் கொண்டு அடிக்க அதனாலே துன்பப்படுவனவாக !;
பகற்குறி வந்து நீங்கும் தலைமகன் போக்கு நோக்கி, தோழி மாவின்மேல்வைத்துச் சொல்லியது. - முதுகூற்றனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 58. நெய்தல், இலக்கியங்கள், நற்றிணை, நுண், நெய்தல், மெய், சோர்ந்து, தேர், சிறிய, நுகம், வந்த, வெளியன், எட்டுத்தொகை, சங்க, எழுதிய, கொண்டு, முரசு