நற்றிணை - 54. நெய்தல்
வளை நீர் மேய்ந்து, கிளை முதல்செலீஇ, வாப் பறை விரும்பினைஆயினும், தூச் சிறை இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து- கருங் கால் வெண் குருகு!- எனவ கேண்மதி: பெரும் புலம்பின்றே, சிறு புன் மாலை; |
5 |
அது நீ அறியின், அன்புமார் உடையை; நொதுமல் நெஞ்சம் கொள்ளாது, என் குறை இற்றாங்கு உணர உரைமதி- தழையோர் கொய்குழை அரும்பிய குமரி ஞாழல் தெண் திரை மணிப் புறம் தைவரும் |
10 |
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே! |
கரிய காலையுடைய வெளிய நாராய்! நீ நின் சுற்றம் முதலாயவற்றோடு சென்று வளைந்த நீர்ப்பரப்பிலுள்ள இரையை அருந்தித் தாவிப் பறந்து வருதலை விரும்பி¢னையாயினும், இரும்புலா அருந்தும் தூச் சிறை நின் கிளையொடு சிறிது இருந்து எனவ கேள்மதி மிக்க புலவைத் தின்னுகின்ற தூய சிறகுகளையுடைய நின் சுற்றத்தோடு சிறிது பொழுது ஈண்டுத் தங்கியிருந்து என்னுடைய சொற்களைக் கேட்பாயாக!; சிறிய புல்லிய மாலைப்பொழுதானது எனக்குப் பெரிய வருத்தஞ் செய்தலை உடையதாயிராநின்றது; அதனை நீ அறியின்; என்மாட்டுப் பெரிதும் அன்புடையையாதலால் வேறுபட்ட மனங்கொள்ளாமல்; என்குறை இத்தன்மையதென்று தழை யுடுப்பவர் கொய்தற்குரிய குழை தழைந்த இளைய ஞாழல் தௌ¤ந்த திரையின் புறத்தைத் தடவாநிற்கும் கண்டல் மர வேலிகளையுடைய நுங்கடற்றுறைச் சேர்ப்பனிடஞ் சென்று அவன் உணருமாறு உரைப்பாயாக !
காமம் மிக்க கழிபடர்கிளவி. - சேந்தங் கண்ணனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 54. நெய்தல், இலக்கியங்கள், நின், நெய்தல், நற்றிணை, சிறிது, அறியின், ஞாழல், கண்டல், மிக்க, சென்று, இருந்து, கிளையொடு, சங்க, தூச், சிறை, அருந்தும், எட்டுத்தொகை