நற்றிணை - 52. பாலை
மாக் கொடி அதிரற் பூவொடு பாதிரித் தூத் தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல் மணம் கமழ் நாற்றம் மரீஇ, யாம் இவள் சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி, வீங்கு உவர்க் கவவின் நீங்கல்செல்லேம்; |
5 |
நீயே, ஆள்வினை சிறப்ப எண்ணி, நாளும் பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே; அன்பு இலை; வாழி, என் நெஞ்சே! வெம் போர் மழவர் பெரு மகன் மா வள் ஓரி கை வளம் இயைவது ஆயினும், |
10 |
ஐது ஏகு அம்ம, இயைந்து செய் பொருளே. |
எமது நெஞ்சமே ! கொடியையுடைய காட்டு மல்லிகைப் பூவுடனே தூய பொற்றகடு போன்ற பாதிரி மலரையும் சேர எதிர் எதிர் வைத்துத் தொடுத்துக் கட்டிய மலர் மாலையைச் சூடிய கூந்தலின்; மணங்கமழும் நாற்றத்தைப் பெற்று, யாம் அவளுடைய சுணங்கமைந்த மார்பிற் கொங்கையை ஒருசேர அணைத்துக்கொண்டு மிக்க இன்சுவையையுடைய இவள் கையால் அணைத்திருத்தலினின்றும் நீங்க மாட்டுகிலேம், நீயே ஆள்வினை சிறப்ப எண்ணிநாளும் பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலை நீ தானும் முயற்சியை மேம்படக் கருதி நாள்தோறும் (எம்மை) இவளைப் பிரிந்து தனித்து உறைகின்ற வாழ்வினை விரும்பிச் சிறிது பொழுதும் ஓய்கின்றனையல்லை; ஆதலின் நீ என்மாட்டு அன்பினையுடையையல்லைமன் இங்ஙனமே நெடுங்காலம் வாழ்வாயாக !; நீ உட்கொண்டு உடன்பட்டு ஈட்டும் பொருள்தான்; வெய்ய போர் செய்ய வல்ல போர்வீரர் தலைவனாகிய சிறந்த கொடையையுடைய ஓரி யென்பவனது கைவண்மைக்குப் பொருந்திய செல்வமே நீ ஈட்டும் பொருளாக நினக்குக் கிடைக்கப் பெறினும் அப்பொருள் இவளது முயக்கத்தினும்காட்டிற் சிறந்ததன்று கண்டாய் !; அது மிக மென்மையுடையதன்றோ அதனால் வேண்டுமெனில் நீயே ஏகுவாய் யாம் வாரகில்லேம்;
தலைமகன் செலவு அழுங்கியது. - பாலத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 52. பாலை, இலக்கியங்கள், யாம், பாலை, நீயே, பிரிந்து, எதிர், நற்றிணை, வாழ்க்கை, ஈட்டும், போர், புரிந்து, இவள், எட்டுத்தொகை, சங்க, மலர், ஆள்வினை, சிறப்ப