நற்றிணை - 395. நெய்தல்
யாரை, எலுவ? யாரே, நீ எமக்கு யாரையும் அல்லை; நொதுமலாளனை; அனைத்தால் கொண்க, நம்மிடையே நினைப்பின்; கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் குட்டுவன் வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்தன்ன, |
5 |
ஓங்கற் புணரி பாய்ந்து ஆடு மகளிர் அணிந்திடு பல் பூ மரீஇ, ஆர்ந்த ஆ புலம் புகுதரு பேர் இசை மாலைக் கடல் கெழு மாந்தை அன்ன, எம் வேட்டனை அல்லையால், நலம் தந்து சென்மே. |
10 |
நண்பனே! யாரை நட்பாகவுடையை? நீ எமக்கு யாராந் தன்மையுடையை?; ஆராயின் நட்புடையாரையும் போல்வாயல்லை! அயலானாயினை!; எம்மிடத்தில் நீ நடந்து கொள்ளும் இயலை ஆராயப் புகின் அஃது அத் தன்மையதேயாகும்; கடிய பகடாகிய யானையையும் நெடிய தேரையுமுடைய குட்டுவன்; பகைவேந்தரைக் கொன்ற போர்க்களத்தின் கண்ணே அவனது வெற்றிமுரசு அதிர்ந்தாற்போன்ற ஒலியையுடைய; அலையுயர்ந்து வருகின்ற கடலிலே பாய்ந்து விளையாட்டயர்ந்து நீராடுமகளிர்; அணிந்து கழித்தெறிந்த பலவாய மலர்களைப் பொருந்தித் தின்ற முதிர்ந்த பசு; மீண்டு தான் உறைகின்ற புலத்துட் புகாநின்ற பெரிய இசையையுடைய மாலைப்பொழுதை எதிர் கொள்ளுகின்ற; கடற்கரையின்கண் விளங்கிய மாந்தை நகர்போன்ற எம்மை; விரும்பி யொழுகுவாயல்லையாதலின்; நின்னாலிழந்த எமது நலனைக் கொடுத்துவிட்டு அப்பாற் செல்லுவாயாக!
'நலம் தொலைந்தது' எனத் தலைவனைத் தோழி கூறி, வரைவு கடாயது. - அம்மூவனார் >
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 395. நெய்தல், இலக்கியங்கள், நெய்தல், நற்றிணை, பாய்ந்து, மாந்தை, நலம், குட்டுவன், யாரை, எட்டுத்தொகை, சங்க, எமக்கு